உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து : ரஜினி

உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Tamil New year wishes 2018இன்று விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது.

எனவே அதிகாலை முதலே ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினியும் தன் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழர்கள் போராடி வருவதால் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது என்ற வகையில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்…

“உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகி விட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு ரஜினி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth Tamil New year wishes 2018

அம்பேத்கரின் அரசியல் சாசன வழிநடப்போம்; கமல் புத்தாண்டு வாழ்த்து

அம்பேத்கரின் அரசியல் சாசன வழிநடப்போம்; கமல் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan tamil new year wishes 2018இன்று விளம்பி என்ற தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது.

இதனையொட்டி பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்… உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம்.

மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Kamalhassan tamil new year wishes 2018

மணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி

மணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருது ஆகிய 2 தேசிய விருதுகளை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பெற்றுள்ளார்.

இந்த விருதுகள் கிடைத்தது பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

AR Rahman talks about Manirathnam and National Award

இதோ அந்த வீடியோ…

விக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.?

விக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Director Hari going to act in movies Here is the answerஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சில டைரக்டர்கள்தான் ராசியான டைரக்டர்களாக இருப்பார்கள்.

அந்த சம்பந்தப்பட்ட டைரக்டர் படத்தில் நடித்தால் அது நிச்சயம் ஹிட்தான் என்று ஆவலாக கால்ஷீட் கொடுக்க காத்திருப்பார்கள்.

அந்த வரிசையில் சூர்யா மற்றும் விக்ரமுக்கு அமைந்த சூப்பர் ஹிட் டைரக்டர்தான் ஹரி.

விக்ரமுக்கு சாமி, அருள் என ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது சாமி 2 படத்தை இயக்கி வருகிறார்.

சூர்யாவுக்கு சிங்கம் 1, சிங்கம் 2, சி3, ஆறு, வேலு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் மற்ற டைரக்டர்கள் போல் ஹரியும் சினிமாவில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து அவர் கூறும்போது… ‘நடிக்கிற வேலையே நமக்கு வேண்டாம் சாமி’ என கூறிவிட்டாராம்.

ஒரு படத்தை இயக்குவதே சுகமான சுமை தான், அது போதும் என தெரிவித்துள்ளார்.

Will Director Hari going to act in movies Here is the answer

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; அடுத்த திட்டம் கட்சி அறிவிப்பு.?

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; அடுத்த திட்டம் கட்சி அறிவிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

What will be next step of Rajinikanth in politicsதான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த பின்னர், நற்பணி மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினிகாந்த்.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை அவர் ஒருங்கிணைத்தார்.

அதன்பின்னர் ரஜினியின் ட்விட்டர் பதிவுகள் எல்லோராலும் தினம் தினம் கவனிக்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும் ஏதாவது ஓரிரு நிகழ்வுகளுக்கு மட்டுமே ரஜினி தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஒருபுறம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனங்களையும் செய்து வருகிறார்.

மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையில் ரஜினியும் அரசியல் குறித்த தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக பேசியும் பேட்டிகளிலும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் நேற்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூமகாலிங்கமும் உடன் இருந்தாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சென்ற ரஜினி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பேசிய நிர்வாகிகள்… தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உகந்த சூழ்நிலை இல்லை.

எனவே கட்சி தொடக்க விழாவை சில மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்களாம்.

அந்த யோசனையை ரஜினி ஏற்றுக் கொண்டதாகவும், போராட்டங்கள் ஓய்ந்து சுமூகமான சூழ்நிலை உருவான பின்னர் கட்சி அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

What will be next step of Rajinikanth in politics

Breaking: மன்னித்து விடுங்கள் தமிழ் மக்களே; கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி அறிக்கை

Breaking: மன்னித்து விடுங்கள் தமிழ் மக்களே; கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj statement about his Mercury release todayகடந்த 45 நாட்களாக தமிழ் சினிமா துறையிலிருந்து எந்தவொரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவருவதால், இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பட சூட்டிங் முதல் சினிமா சம்பந்தமாக எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வேலையிழந்து காணப்படுகிறது.

இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த படத்தை வசனங்களே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் வசனங்கள் இல்லாத காரணத்தினால் இது எல்லா மொழி ரசிகர்களுக்கும் பொதுவானதாகவே மாறியுள்ளது.

எனவே இந்த படத்தை தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியிட நினைத்திருந்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் தவிர உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார்.

படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், படம் தொடர்பாக ஓர் அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

இன்று நான் நல்ல நிலையில் இருப்பதற்கு தமிழ் ரசிகர்கள்தான் காரணம்.

ஆனால் இந்த படத்தை தவிர்க்க முடியாத காரணத்தால், இன்று வெளியிட்டுள்ளேன்.

ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழகத்தில் வெளியிடுவேன். இதன் ஹிந்தி பதிப்பை கூட தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கவில்லை.

எனவே ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் என்றும் என் சொந்த மாநிலத்தில் வெளியிடாமல் போனதற்கு வருந்துகிறேன் மன்னிப்பு கோருகிறேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து திருட்டுத்தனமாக படம் பார்க்காதீர்கள். ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரில் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karthik Subbaraj statement about his Mercury release today

அவரின் அந்த அறிக்கை இதோ…

mercury release karthik

More Articles
Follows