தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியபோது…
ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை எனக்கு பிடிக்கும். அவர் இரும்பு போல் உழைப்பதால் எறும்பாக இருக்கிறார்.
மன்னிக்கவும் எறும்பாக உழைத்து இரும்பாக இருக்கிறார். இதை வேற இணையத்தில் ட்ரோல் செய்வாங்க.. எனவும் பேசினார்.
ஏசி. சண்முகம் போல நானும் முடியை வைத்திருக்கலாம். ஆனா இப்போ முடி இல்லாம போச்சு என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டார். சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்று விட்டார்.
உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும்.
நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்று பேசினார்.