ஓவரா பேசி அரசியல் செய்பவர்களுக்கு ரஜினி கொடுத்த பதிலடி

ஓவரா பேசி அரசியல் செய்பவர்களுக்கு ரஜினி கொடுத்த பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth slams Loose talk politiciansவிரைவில் தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்த் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை, நடிகர் சங்க போராட்டம் உள்ளிட்டவைகளை குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாது…

“நான் நிறைய பேசுவதில்லை. நிறைய பேசி பேசி அரசியல் செய்பவர்களை நாம் பார்த்துவிட்டோம்.

நிறைய பேசுவதால் நிறைய எதிரிகள் உருவாகுகிறார்கள். எனக்கு யாரும் எதிரியில்லை. கமலை எதிரியாக நினைக்கவில்லை.

என் எதிரியெல்லாம் மக்களின் ஏழ்மை கண்ணீர் லஞ்சம்தான்” என்றார் ரஜினிகாந்த்.

Rajinikanth slams Loose talk politicians

நடிகர் சங்க போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை..? சிம்பு விளக்கம்

நடிகர் சங்க போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை..? சிம்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu clarifies Why he not participated in Nadigar Sangam protestகாவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.

இதில் சிம்பு பங்கேற்கவில்லை. அதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது…

நடிகர் சங்க போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அந்த போராட்டத்தில் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் அது மௌன போராட்டம்.

மேலும் திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு பிரச்சினை மேல் பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை ஆரம்பாகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது.

அவர் மரணம் எப்படி நடந்தது? என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.

காவிரியில் வாழ்கிற மக்கள் நிச்சயம் தண்ணீர் தர தயாராக இருப்பார்கள். ஆனால் அந்த மக்களுக்கும் நமக்கும் நடுவில் நிற்கும் அரசியல்வாதிகள்தான் இதை அரசியலாக்கிவிடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.” என்று ஆவேசமாக பேசினார்.

STR aka Simbu clarifies Why he not participated in Nadigar Sangam protest

சூட்டிங் இல்லாத போதும் நடிகர் சங்க போராட்டத்திற்கு வராத ஹீரோயின்ஸ்

சூட்டிங் இல்லாத போதும் நடிகர் சங்க போராட்டத்திற்கு வராத ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top heroines not participated in Nadigar Sangam protest for Cauvery and Sterlite issueகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகுமார், விஷால் உள்ளிட்ட நடிகர்களும் பிரபல இயக்குனர்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

ஆனால், ரசிகர்களின் இன்றைய பேவரைட் நாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஒரு மாத காலமாக எந்தவொரு தமிழ் படத்தின் சூட்டிங்கும் நடைபெறவில்லை.

அப்படியிருந்தும் தமிழகத்திற்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகைகள் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Top heroines not participated in Nadigar Sangam protest for Cauvery and Sterlite issue

ஐபிஎல் பற்றி அப்துல்கலாம் ஆன்மா அட்வைஸ்; சிம்புவின் செம காமெடி

ஐபிஎல் பற்றி அப்துல்கலாம் ஆன்மா அட்வைஸ்; சிம்புவின் செம காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Late Abdul Kalam soul advice me to Ban IPL match at Chennai says Simbuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் நடத்தினர்.

இதில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.

அஜித் இதுவரை காவிரி விவகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. அவர் திறக்க போவதுமில்லை என்பது வேறு கதை.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத சிம்பு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது அவர் பேசும்போது…

ஐபிஎல் போட்டியில் கலந்துக் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த காவிரி விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும்.

கிரிக்கெட் போட்டியாளர்கள் கறுப்பு கொடிகள் அணிய வேண்டும் என ரஜினி சார் சொன்னார். வேண்டாம் அவர் பேரை சொன்னால் ஏதாவது பிரச்சினை வரும்.

அப்துல் கலாம்… அவரு இறந்துட்டாரா? அப்படின்னா அவருடைய ஆன்மாதான் ஐபிஎல் போட்டியில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க சொன்னது.

எங்களை மட்டும் நீங்கள் போட்டி மைதானத்திற்குள் விட்டு பாருங்கள். அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கள். மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.” என்று பேசினார் சிம்பு.

Late Abdul Kalam soul advice me to Ban IPL match at Chennai says Simbu

 

Breaking: காவிரிக்காக நடிகர் சங்க போராட்டம்; முக்கிய தீர்மானங்கள் இதோ…

Breaking: காவிரிக்காக நடிகர் சங்க போராட்டம்; முக்கிய தீர்மானங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam protest for Cauvery Management Board and Sterlite Factory Issueகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மவுன போராட்டம் நடைபெற்றது.

இதன் நிறைவாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…

  • மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அரசு செய்யக்கூடாது.
  • ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
  • அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
  • திரையுலகினரின் கையெழுத்துக்களைப்பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Nadigar Sangam protest for Cauvery Management Board and Sterlite Factory Issue

nadigar sangam all stars

Breaking: எவருக்கும் அஞ்ச மாட்டோம்; ரஜினி-கமல் முன்னிலையில் சத்யராஜ் ஆவேசம்

Breaking: எவருக்கும் அஞ்ச மாட்டோம்; ரஜினி-கமல் முன்னிலையில் சத்யராஜ் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilan wont fear for Central Force says Sathyarajகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் நடத்திய மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி, கமல், சிவகுமார், இயக்குனர் எஸ்பி முத்துராமன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இது மௌன போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பேசினார்.

பின்னர் இறுதியாக இயக்குனர் ஆர்கே. செல்வமணி நடிகர் சங்க கோரிக்கைகள் குறித்து அப்போது பேசினார்.

மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர்.

எவரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசும்போது…

நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம் இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம்.

எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.

காவிரிக்காக குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள்..! இல்லையெனில் ஓடி, ஒளிந்து கொள்ளுங்கள்” என்று பேசினார் சத்யராஜ்.

Tamilan wont fear for Central Force says Sathyaraj

More Articles
Follows