தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துாத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த நிகழ்வின் போது ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்றை ஒளிப்பரப்பினார்கள்.
அதில் உள்ளதாவது…
ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம்.
இதில் சுயநலம் இருக்கக்கூடாது. பொது நலம் மட்டுமே இருக்க வேண்டும்.
அதற்காக குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.
மற்ற மாநிலத்தவர்கள் நம்மை பார்த்து போற்ற வேண்டும். அப்படியொரு அரசியல் மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்.
அது ஆண்டவன் அருளால், உங்கள் செயலால் நிச்சயம் நிறைவேறனும்.” என்று அந்த பதிவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன் ஒகி புயலில் மாயமான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அளிக்கப்பட்டது.
Rajinikanth new video speech about his political party