BREAKING அரசியலுக்கு வர முடியல.. வேதனைப்படுத்தாதீர்கள்..; வளர்க தமிழ்நாடு – ரஜினி

BREAKING அரசியலுக்கு வர முடியல.. வேதனைப்படுத்தாதீர்கள்..; வளர்க தமிழ்நாடு – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 25 வருடங்களாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.

கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி… இப்போ இல்ல… எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த அறிவிப்பு்வெளியான அன்றே, ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பி ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நேற்று ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்..

ஆனாலும் அவர்களின் எதிர்ப்பை மீறி 12,000க்கும் மேற்ப்பட்ட ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் கூடினர்.

வா தலைவா வா… என அரசியலுக்கு ரஜினியை அழைத்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.

அதில்…

“நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

வாழ்க தமிழக மக்கள்…
வளர்க தமிழ்நாடு…
ஜெய்ஹிந்த்”

” என குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

‘Rajinikanth latest statement on joining politics

வாட்ஸ் அப் போடும் கன்டிசன்கள்… தெறித்து ஓடும் பயனாளர்கள்..; சிக்னல் டெலிகிராம் பயன்படுத்த பரிந்துரை

வாட்ஸ் அப் போடும் கன்டிசன்கள்… தெறித்து ஓடும் பயனாளர்கள்..; சிக்னல் டெலிகிராம் பயன்படுத்த பரிந்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ் அப் என்ற செயலி பலரது வாழ்க்கையை மாற்றிவிட்டது எனலாம்.

காலையில் எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் வாட்ஸ் அப் ஆன் செய்து பார்ப்பதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.. (நான் உட்பட)

கடந்த 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் “பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை முகநூல் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்பு விடுத்துள்ளது.

பிப்ரவரி 8ம் தேதிக்குள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியில் நுழைய முடியாது என கூறப்படுகிறது.

இதனால் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியேறி மற்ற செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது.

இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் போன்ற என்கிரிப்டட் செயலிகளை பயன்படுத்துமாறு உலகின் நம்பர் 1 பணக்காரரான டெல்ஸா நிறுவன அதிபர் எலோன் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

WhatsApp update Signal and Telegram apps alternatives for privacy seekers

சின்னத்திரை டூ வெள்ளித்திரை..; சிவகார்த்திகேயன் வழியில் சித்தார்த் குமரன்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை..; சிவகார்த்திகேயன் வழியில் சித்தார்த் குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள்.

மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள்.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார்.

சின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர்.

பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பின் “ரெக்க கட்டி பறக்குது மனசு” நெடுந்தொடரில் கதாநாயகனாக ஆழமான ஒரு பாத்திரத்தில், தனது அற்புதமான நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.

“அச்சமில்லை, அச்சமில்லை” முதல் பல ரியாலிடி ஷோக்களில் நாயகனாக பலராலும் பாராட்டப்பெற்றார்.

இப்பொழுது Vijay Tvயின் “தேன்மொழி BA” தொடரில் ஜாக்குலினுடன் அழகான ஹீரோவாக hero sir எனும் அடைமொழியில் கலக்கி வருகிறார் சித்தார்த்.

தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடும் அளவு புகழ் பெற்றுள்ள இவர்
கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார்.

நடிகர் சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாகவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தற்போது வெள்ளித்திரையை நோக்கி சித்தார்த்தின் பயணம் 2021இல் துவங்கியுள்ளது.

மிக விரைவில் இந்த திறமையான, அழகான நாயகனை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காணலாம்.
www.actorsidharth.com

TV Actor Sidharth Kumaran movie updates

அரசியலுக்கு முற்றுப்புள்ளி..; ஆறு மாசத்துக்கு ‘அண்ணாத்த’ வேண்டாம்.. அமெரிக்கா பறக்கும் ரஜினி.!

அரசியலுக்கு முற்றுப்புள்ளி..; ஆறு மாசத்துக்கு ‘அண்ணாத்த’ வேண்டாம்.. அமெரிக்கா பறக்கும் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.

ஆனாலும் ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு உடல்நிலை எப்போது சரியாகிறதோ அப்போது படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ளலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.

இதனிடையில் தன் உடல்நிலை காரணத்தால் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என கடிதம் வெளியிட்டு அறிவித்தார்.

விரைவில் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறாராம் ரஜினி.

மறுபுறம் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ பட சூட்டிங் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.

Rajini health and Annatthae movie shoot updates

‘வலிமை’ அப்டேட் தந்தா ஓட்டு.. ஆள்பவர் முதல் ஆட்டோ வரை விடாத அஜித் ரசிகர்கள்..; இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு.?

‘வலிமை’ அப்டேட் தந்தா ஓட்டு.. ஆள்பவர் முதல் ஆட்டோ வரை விடாத அஜித் ரசிகர்கள்..; இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

இது போன்ற சில தகவல்கள் மட்டுமே வெளியே தெரிய வந்துள்ளது.

எனவே அஜித் ரசிகர்கள். அப்டேட் தராத போனி கபூரை கண்டித்து வால் போஸ்டர் கூட ஒட்டி வந்தனர்.

சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட ‘வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க, உங்களுக்கு ஓட்டு போடுறோம் என ஒரு சில அஜித் ரசிகர்கள் கோஷம் போட்டனர்.

நாட்டு பிரச்னைகளை பேசாமல் இதையா முதல்வர் கிட்ட கேட்பீங்க என அங்கிருந்தவர்களே பேசினர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வெயிட்டிங் ஃபார் வலிமை அப்டேட்’ என தனது ஆட்டோவில் வாசக ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.

இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் முடியும் வரை வலிமை அப்டேட் & ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என அஜித் சொன்னாராம்.

ஆனால் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

வலிமை அப்டேட் வரவில்லை என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ அஜித் பேஃன்ஸ்? தெரியலையே…

Valimai updates and Ajith fans atrocity

திரையரங்கே கோயில்… ஓடிடி பூஜை அறை.; அரசியல் குறித்து பேச மறுப்பது பயமில்லை.. – சசிகுமார்

திரையரங்கே கோயில்… ஓடிடி பூஜை அறை.; அரசியல் குறித்து பேச மறுப்பது பயமில்லை.. – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரமணியபுரம் இயக்குநர் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருக்கு சங்கம் சார்பில் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சசிகுமார் பேசுகையில்…

இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.

இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம் பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.

கொரோனா பலரது வாழ்க்கை யிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் சினிமா என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம்.

OTT என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல…. வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல சினிமாவை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன்.

எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.

சுப்ரமணியபுரம் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போது வரை பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்வில் எப்போதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

சினிமா உள்ளவரை பத்திரிக்கையாளர்களும் நிச்சயம் இருப்பார்கள்.

அவர்களுக்கு நான் நிறைய கடமை பட்டிருக்கிறேன். இப்போதும் நான் மாணவன் தான். ரொமான்ஸ் என்றாலே கொஞ்சம் கூச்சமா தான் இருக்கிறது. எனினும் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

அரசியல் குறித்து பல நடிகர்கள் பேசுவதில்லை என என்னிடமும் ஏன்? என சிலர் கேட்பதுண்டு. இது ஏதோ பயமோ அல்லது ஒதுங்கிப் போகும் எண்ணமோ கிடையாது. எங்களுக்கு பின்னால் பலரின் வாழ்க்கையும் பெரும் தொகையும் இதில் அடங்கியுள்ளது.

ஏதேனும் ஒரு வார்த்தையை விட்டு விட்டு அதனால் எங்களை சேர்ந்தவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதாலேயே நடிகர்கள் கவனமாக இருக்கிறார்கள் அவ்வளவே.

மேலும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

OTT is Home Pooja room but Theatres were Temple says Sasikumar

More Articles
Follows