தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், டேனியல், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோ நடித்துள்ள இணைய தொடர் ‘செங்களம்’.
ZEE5 தயாரித்துள்ள இந்த இணைய தொடருக்கு தரன் இசையமைத்துள்ளார்.
வருகிற மார்ச் 24ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்தப் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமீர் கலந்து கொண்டார். கலையரசன் நடித்துள்ள கேரக்டரில் முன்பு அமீர் நடிப்பதாக இருந்தது எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார் எஸ் ஆர் பிரபாகரன்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமீர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
“தற்போது திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் வியாபாரம் ஆகிவிட்டது.
இந்தியாவில் சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் ஒருவர் இருக்கிறாரா.? ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை.
‘தேவர் மகன்’ படத்திற்கு கூட ஒரு சிறப்பு விருது கூட நம் தமிழர்களின் வற்புறுத்தலால் மட்டுமே வழங்கப்பட்டது.
2007இல் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் வெளியானது. அப்போது தமிழக அரசால் அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர் சிறந்த நடிகரா.? அந்த ஆண்டில் வேறு சிறந்த நடிகர் இல்லையா.?
‘சிவாஜி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாரா.? என கேள்வி கேட்டார். அவர் சிறந்த என்டர்டெயினர்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.
முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த்.”
என்றார்.
அதன் பின்னர் அரசியல் குறித்து கேட்கப்பட்ட போது நான் சாகும் வரை அரசியல் பற்றி பேசுவேன்” என்றார்.
வடசென்னை 2 படம் பற்றி வெற்றிமாறன் தான் தெரிவிக்க வேண்டும்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்கிறேன்.. ஆனால் அந்த படம் பேசப்பட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
வெற்றிமாறன் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் அதை தொடர முடியவில்லை.
அந்த படத்திற்கு தான் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசினார் அமீர்.
Rajinikanth is not best actor says Director Ameer