காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதன்முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஜூலை 28ல் இந்த நிகழ்ச்சிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாய் செஸ் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களை ரஜினிகாந்த் கௌரவித்துள்ளார்.

அந்த காவலர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களின் பணியை பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த்.

அவர்கள் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Rajinikanth honored the guards by inviting them home; Do you know why?

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘விருமன்’ படக்குழு.; ரசிகர்கள் உற்சாகம்

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘விருமன்’ படக்குழு.; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக்கை முழு கிராமத்து மனிதராக காட்டி சூப்பர் ஹிட்டான படம் ‘கொம்பன்’.

இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார்.

எனவே முத்தையா – கார்த்தி கூட்டணிக்கு எப்போதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் மீண்டும் இணைவதாக ‘விருமன்’ படத்தை அறிவித்தனர்.

இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தயாரிக்கிறார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படமும் கிராமத்து கதையில் உருவாகி இருக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்தான் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

‘விருமன்’ படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

‘விருமன்’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அதன்படி அறிவிப்பும் வெளியானது.

ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்பே அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பே ‘விருமன்’ வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது எனலாம்.

‘Viruman’ team announces new release date

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங் அப்டேட்

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக 3வது முறையாக இணைந்துள்ளனர்.

ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தாமரை பாடல்களை எழுதியுள்ளார்.

இதில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்….’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ஏற்கெனவே வைரலானது.

இந்த படம் 2022 செப்டம்பர் 15ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் தந்தை டி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு தங்கியிருந்தார் சிம்பு.

தற்போது சிம்பு சென்னை வந்துள்ள நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங்கை சிம்பு முடித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Update for Simbu – Gautham Menon’s ‘Vendhu Tanantha Kadu’ movie

தேசிய விருது இயக்குனரின் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி.?

தேசிய விருது இயக்குனரின் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் 2 தேசிய விருதுகளை வென்றதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மண்டேலா’.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், வசன கர்த்தாவுக்கான விருதும் மண்டேலா திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது

மடோனா அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு & ஷீலா நடித்திருந்தனர்.

தற்போது மடோனா அஸ்வின் இயக்கவுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப் படத்தில் கவுண்டமணி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

கியாரா அத்வானி ஹீரோயினாகவும் மிஷ்கின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க படக்குழு அணுகியதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Sivakarthikeyan – Vijay Sethupathi joins for a new film?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குருவி, அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணன், நவம்பர் மாதம் & பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்) உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் ஜி.எம்.குமார்.

படங்களில் நடிப்பதற்கு முன்பே 1980களில் அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகியப் படங்களை இயக்கியவர் இவர்.

மேலும் கன்னிராசி, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன் ஆகிய படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இத்துடன் பூவே உனக்காக, செம்பருத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் ஜி.எம்.குமார்.

இந்த நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Health update on Actor- Director GM Kumar

அதர்வா மிஷ்கின் தனஞ்செயன் பங்கேற்ற ‘குருதி ஆட்டம்’ பிரஸ் மீட் சுவாரஸ்யங்கள்

அதர்வா மிஷ்கின் தனஞ்செயன் பங்கேற்ற ‘குருதி ஆட்டம்’ பிரஸ் மீட் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”.

பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது.

ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள்.

இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி.

இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது..

இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார்.

இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இது ஒரு ஆக்‌சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். இந்த படம் ஆகஸ்டு 5 வெளிவருகிறது, படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் அதர்வா கூறியதாவது..

இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஶ்ரீகணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஶ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5 வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது..

குருதி ஆட்டம் நாம் வெகுநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு படம். கொரோனாவினால் பல படங்கள் சிக்கலில் மாட்டியது. அதை தவிர்த்துவிட்டு தான் இந்த படத்தின் வெளியீட்டை பார்க்க வேண்டும்.

அதர்வா ஒரு எனர்ஜிட்டிக் ஆன நடிகர். அவர் இந்த படத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த குருதி ஆட்டம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். Rockfort Entertainment க்கு இது பெரிய வெற்றியாக அமைய வேண்டும். இயக்குநர் ஶ்ரீகணேஷ் திறமையானவர், இந்த படம் பார்க்க பிரஷ்ஷாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் வட்ஷன் பேசியதாவது..

இந்த படம் எங்களுக்கு உணர்வுபூர்வமான படம். இயக்குநருக்கும், நடிகர் அதர்வாவிற்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் ஒரு புதுமையான ஆக்‌சன் திரைப்படமாக இருக்கும்.

தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது..

இயக்குநர் மேல் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அவர் மிகவும் திறமையான இயக்குநர். அவருடைய முதல் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். நடிகர் அதர்வா அவருடைய தந்தையை போல நல்ல நடிகர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

நிர்வாக தயாரிப்பாளர் ஶ்ரீராம் பேசியதாவது…

இந்த திரைப்படம் புதுமையான ஆக்சன் படம், கடின உழைப்புக்கு பிறகு திரைக்கு வருகிறது. நடிகர் அதர்வா மிகப்பெரும் துணையாக இருந்தார். அவரால் தான் இந்தப்படம் முழுதாக முடிவடைந்தது. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

இப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Kuruthi Aattam press meet high lights

More Articles
Follows