தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் முதன்முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று ஜூலை 28ல் இந்த நிகழ்ச்சிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாய் செஸ் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடந்தது.
இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களை ரஜினிகாந்த் கௌரவித்துள்ளார்.
அந்த காவலர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களின் பணியை பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த்.
அவர்கள் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Rajinikanth honored the guards by inviting them home; Do you know why?