தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தாண்டில் 2வது முறையாக தன் ரசிகர்களை சந்தித்து அவர்களின் ஆயுட்கால ஆசையான போட்டோ எடுப்பதை நிறைவேற்றி வருகிறார் ரஜினிகாந்த்.
டிசம்பர் 31ல் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என ரஜினி பேசியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு பல டிவிக்களில் விவாத பொருளாகிவிட்டது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
அப்போது அவர் பேசியதாவது…
ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.
நேற்று சந்திப்பில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்துக் கொண்டீர்கள். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும் நிறைய பேச வேண்டும் என நினைக்கிறேன். நிறைய பேச வேண்டிய நேரம் இருக்கு. மேடை இருக்கு. என்றார்.
அவர் அரசியல் மேடையை பற்றி சொன்னதை புரிந்துக் கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியுன் அறிவிப்புக்காக உங்களை போல நாங்களும் காத்திருக்கிறோம்.