தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.
எனவே பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் சத்யநாராயணா வீட்டு வாசல் முன்பு திரண்டனர்.
இதனால் வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி Flying Kiss கொடுத்தார்.
ரஜினி சென்னை சென்ற பின்னர் அவரது சகோதரர் சத்ய நாராயணா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது…
“ரஜினிக்கு எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
இரவு 8 மணிக்கு வந்தார். காலை 5 மணிக்கு கிளம்பி விட்டார். 12 மணிக்கு சென்னை சேர்ந்துவிட்டதாக போனில் பேசி தெரிவித்தார்.
இங்கு கர்நாடக அரசியலில் ரஜினிகாந்தின் பங்களிப்பு இருக்காது. அவரது கவனம் தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கும்.
அவர் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நாங்கள் பேசவில்லை.
டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பார். நான் தேர்தல் பிரசாரத்துக்கு கண்டிப்பாக செல்வேன்” என்றார்.
Rajinikanth brother Sathya Narayanan about Rajini’s political entry