தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரும் மே 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கவுள்ளார்.
இந்த விழாவில் பல நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
இதுகுறித்து ரஜினி இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது… “நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய்க்கு பின் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார். மோடி என்ற தனிமனிதனின் தலைமைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை உருவானதால் அவருக்கு இங்கு வெற்றி கிட்டவில்லை.
தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி – கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.
தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது” என பேசினார்.
Rajini talks about Modi Rahul and Kamals election result