தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
அப்போது மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் ரஜினி பேசும்போது…
‘கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல்.
கமல் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர்.
கமல் தன் கடைசி காலங்களில் அவர் சினிமாவில் நடிக்கவிட்டாலும் இந்த அலுவலகத்தில் வந்து இருப்பார். அவர் வேறு துறையில் (அரசியல்) இருந்தாலும் இங்கு வந்து அமருவார்.
ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து கமல் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரை பார்க்க முடியாது. உறங்குகிறார்கள் என்றார்கள்.
அவரை எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர் என்னை விட சின்ன வயது. இல்லை என்றால் அவர் காலில் விழுந்துருப்பேன்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அப்படியொரு முயற்சியை செய்திருந்தார் கமல்.
கமல் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார்.
நான் நிறைய சினிமா பார்ப்பேன். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன்.
கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது.
என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் ஒன்றை சொன்னார். தமிழ் மட்டும் கற்றுக்கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்றார்.
அவர் தமிழ் ரசிகர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை அது.
கே.பி.க்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்துக் கொண்டே கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்’ என்றார்.
Rajini talks about Kamals last period in life at KB Statue inauguration