தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை லதா ரஜினிகாந்த் நடத்தினார்.
அதில் அவரது கணவரும் திரையுலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.
அவருடன் லதா ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரஜினி உள்ளிட்டவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது…
நாட்டின் எதிர்காலமே குழந்தைகள்தான். பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள்.
சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச்சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்துவதில்லை குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம்.
குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கு பின் ஒரு பெரிய மாஃபியா இருக்கிறது.
குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்
குழந்தைகள் நலனை மத்திய அரசும் மாநில அரசும் சரியாக கவனிக்கவில்லை “ என குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் பேசினார்.
Rajini Speech about Child abduction At Grand Concert Chennai