தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை (நவ., 29) உலகமெங்கும் வெளியாகிறது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 10,000க்குமே மேற்பட்ட தியேட்டகளில் ரிலீஸாகிறது.
ரூ. 543 கோடியில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் புயல்பாதித்த பகுதிகளில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி நடத்த வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பேனர், கட்அவுட் வைக்கவும் ரஜினி தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் சார்பில் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2.0 பட சிறப்பு காட்சி கஜா புயல் பாதித்த பகுதிகளில் திரையிடக்கூடாது, தியேட்டருக்குள் மட்டும் ஒரு பேனர் வைத்துக் கொள்ளலாம்.
மற்ற இடங்களில் கட்அவுட், பேனர்கள் வைக்ககூடாது. பேனர், கட்அவுட் வைக்க ஆகும் செலவை மன்ற நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.
Rajini request his fans to avoid 2pointO cut outs in Gaja cyclone affected areas