தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரை உலகைத் தாண்டியும் அனைவரிடமும் நல்ல மனிதர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார்.
இவர் அண்மையில் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்தும் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்….
“நான் சிவக்குமாருடன் புவனா ஒரு கேள்விக்குறி மற்றும் கவிக்குயில் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.
அவருடைய பழகிய நாட்களை மறக்க முடியாது.
அப்போது புகை மற்றும் மது பழக்கங்களுக்கு நான் அடிமையாக இருந்த நேரம்.
அப்போதெல்லாம் ரஜினி நீ பெரிய நடிகனா வருவ. இந்த பழக்கத்தால உன் உடம்பை கெடுத்துக்காதே என்பார்.
என்னடா இந்த ஆளு, நிம்மதியா இருக்க விடமாட்டுறாரு. அப்படின்னு சில சமயங்களில சலிப்பா இருக்கும்.
அவர் நல்ல மனிதர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் சொன்னது பலித்தது.
நான் பெரிய நடிகன் ஆனேன். அவர் பேச்சை கேட்காததினால் என் உடம்பை கெடுத்து கொண்டேன்.
இன்னைக்கு அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை.
அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்யமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்.
இந்த மாபெரும் கலைஞன் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.”
என்று இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார்.