அரசியல் களம் காண விரைவில் ரஜினி-கமல் சந்திப்பு..?

அரசியல் களம் காண விரைவில் ரஜினி-கமல் சந்திப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and kamal haasanசில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும்போது அரசியல் களத்தில் சந்திப்போம் என்பது போல தன் அரசியல் வருகையை கூறி சென்றார் ரஜினிகாந்த்.

இவரைத் தொடர்ந்து ட்விட்டர் மற்றும் பிக்பாஸ் சர்ச்சைகளால், கமலும் தன் அரசியல் வருகை குறித்து சூசமாக தெரிவித்துள்ளார்.

புறப்படு தோழா, முடிவெடுத்தால் முதல்வர் என்ற தோனியில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கமலும் ரஜினியும் விரைவில் இதுகுறித்து சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் செட் அமைந்துள்ள ஸ்டுடியோவில்தான், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட தாராவி செட்டும் போடப்பட்டுள்ளதாம்.

எனவே படப்பிடிப்புக்காக இருவரும் அங்கே வரும்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்

மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி நடிப்பில் ஷங்கர் பிரம்மாண்டமாக 3டியில் இயக்கியுள்ள படம் ‘2.0’.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.

இதில் உள்ள ஒரு பாடல் ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்க இருக்கிறார்களாம்.

தற்போது அப்பாடலில் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரம்மாண்டமான அரங்கில் சுமார் 12 நாட்கள் இப்பாடலை படமாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக எமி ஜாக்சன் சுமார் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாராம்.

பாஸ்கோ நடன இயக்குநராக பணிபுரிய உள்ள இப்பாடலுக்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலின் இசையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு கொடுக்கப்பட இருந்த பட்டம், அரசியல்வாதியால் ரத்தானதா..?

சூர்யாவுக்கு கொடுக்கப்பட இருந்த பட்டம், அரசியல்வாதியால் ரத்தானதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaதமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் நடிகர்கள் பலருக்கும் ஒவ்வொரு பட்டம் உள்ளது.

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார், கமலுக்கு உலகநாயகன், விஜய்க்கு தளபதி என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் சூர்யாவுக்கு இதுவரை எந்த பட்டமும் இல்லை. அவரும் இதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன், ‘புரட்சிப்புயல்’ என்ற பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளவிருந்தாராம்.

ஆனால் புரட்சிப்புயல் என்று அழைக்கப்பட்ட ஒரு பிரபல அரசியல்வாதியின் எதிர்ப்பால் அது ரத்து ஆனதாக கிசுகசுக்கப்படுகிறது.

எது உண்மையோ?

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்… விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன்.

அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

இப்படக்குழுவினர் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அதில் விஷால் பேசும்போது…

கடந்த 8 வருடங்களாக மிஷ்கினுடன் பணிபுரிய ஆசைப்பட்டு கடைசியில் மிஸ்ஸாகிவிடும்.

இப்போது நிறைவேறியுள்ளது. எனக்கு கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்.” என்று பேசினார்.

மீண்டும் காதல் மன்னனாக அஜித்… தல ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் காதல் மன்னனாக அஜித்… தல ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam stillsசிவா இயக்கத்தில் அஜித் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் ‘காதலடா’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகிறது.

இது, அருமையான க்ளாசிக் பாடலாக இருக்கும் என்று அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒரு காதல் மன்னன் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

ட்விட்டரில் இருந்து குஷ்பூ விலக இதான் காரணம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress khushbooநடிகை குஷ்பூ தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இதனிடையில் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் ட்விட்டரில் அவ்வப்போது நாட்பு நடப்புகளை பதிவிட்டு தன் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டருக்கு தான் அடிமையாகிவிட்டதாகவும், சில காலம் ஒதுங்கிவிட்டு, பின்னர் வந்து இணைவதாகவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

khushbusundar‏Verified account @khushsundar
Ok friends..hve decided 2 go off Twitter 4 sumtime..want 2 do start reading again..dis platform is like addiction..promise 3 cme back soon.

khushbusundar‏Verified account @khushsundar
Bye friends..happy twèeting..use tjis platform to build this nation n not 2 divide..keep hate n vengeance out..spread love,joy n peace.

More Articles
Follows