தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.
ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக நேற்று 3 பக்க கடிதம் எழுதி அறிவித்தார் ரஜினி.
ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
டிசம்பர் மாத ஆரம்பத்தில்.. ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை காட்டினார். ஆனால் டிசம்பர் இறுதியில் ஏமாற்றிவிட்டார்.
இதனால் அவரது ரசிகர்கள், ரஜினி வீடு முன் அமர்ந்துகொண்டு நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போராடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்த போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டத்தில் போராடிவரும் ரஜினி ரசிகர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
சில மணி நேரங்களில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Rajini fans protest in Valluvar kottam