தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதனிடையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.
‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது்
இது ரஜினி அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..
மேற்கண்ட செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த விழாவினை முன்னெடுக்கும் ரஜினி ரசிகர் சோளிங்கர் என் ரவி அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ விழா ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
ஆனால் நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சென்று சேரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை ரஜினி அனுமதி இல்லாமல் இந்த விழா நடத்தப்படுகிறதா.? இந்த விழா திடீரென ரத்து செய்யப்பட என்ன காரணம் என ரஜினி ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.?!
இதோ அந்த அறிக்கை…
Rajini Fans event Cancelled; Rajini behind the sudden statement.?!