BREAKING ரஜினி ரசிகர்கள் விழா ரத்து.; திடீர் அறிக்கையின் பின்னணியில் ரஜினி.?!

BREAKING ரஜினி ரசிகர்கள் விழா ரத்து.; திடீர் அறிக்கையின் பின்னணியில் ரஜினி.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதனிடையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது்

இது ரஜினி அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மேற்கண்ட செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விழாவினை முன்னெடுக்கும் ரஜினி ரசிகர் சோளிங்கர் என் ரவி அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ விழா ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆனால் நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சென்று சேரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ரஜினி அனுமதி இல்லாமல் இந்த விழா நடத்தப்படுகிறதா.? இந்த விழா திடீரென ரத்து செய்யப்பட என்ன காரணம் என ரஜினி ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.?!

இதோ அந்த அறிக்கை…

Rajini Fans event Cancelled; Rajini behind the sudden statement.?!

நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் சூரி. அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் சூரி. அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ‘மதயானை கூட்டம்’ புகழ் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.

மதுரையின் தெருக்கூத்து கலைஞர்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்துக்கு அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’ மற்றும் ‘விசிறி’ ஆகிய படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் கதை எழுதியுள்ளார். சூரியும் வெற்றி வீரன் மகாலிங்கமும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க சென்னைக்கு வந்த சிறுவயது நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori’s next movie writer Vettri Veeran Mahalingam makes a hot announcement

இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி மகன் இன்பநிதி, சஹானா என்ற இளம்பெண்ணை காதலிப்பதாக வதந்தி பரவி, அவர்களின் சில படங்கள் இணையத்தில் வைரலாகின. இன்பநிதியின் தாய் கிருத்திகா சமூக ஊடகங்களில் தனது மகனுக்கு ஆதரவாக அன்பை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம் என்று கூறினார்.

தற்போது, ​​உதயநிதி ஸ்டாலின் எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். இன்பநிதிக்கு 18 வயதுக்கு மேல் ஆகிறது. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. பொது வெளியில் பேசுவது சரியாக இருக்காது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு எல்லைக்கு அப்பால் தலையிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin breaks silence on the controversy over his son Inbanithi’s personal life!

அஜித்தின் ‘பில்லா’ படத்தில் இந்த ஹீரோயின் தான் முதல் சாய்ஸ் – இதுவரை பார்க்காத படங்கள்

அஜித்தின் ‘பில்லா’ படத்தில் இந்த ஹீரோயின் தான் முதல் சாய்ஸ் – இதுவரை பார்க்காத படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பில்லா’ விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். நயன்தாராவின் சாஷா பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிகினியில் அவரது கீழ் முதுகில் பச்சை குத்திய காட்சிகள் இன்னும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

அசின் தான் ‘பில்லா’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் நடிகை என தெரிய வந்துள்ளது . அசினின் டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேதி பிரச்சனையால் திடீரென இந்த
படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

This heroine was first choice for Ajith’s ‘Billa’ – Unseen viral pics

அதிக உப்பு ஆபத்து.; நாத்திகர்களை கண்டால் சிரிப்பதா.? அழுவதா.? – ரஜினி

அதிக உப்பு ஆபத்து.; நாத்திகர்களை கண்டால் சிரிப்பதா.? அழுவதா.? – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது…

“உணவில் அதிக அளவில் உப்பை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

என் வீட்டுக்கு புதிதாக வந்த சமையல்காரர் சிறப்பாக சமைத்தார். ஆனால், எனக்கும் என் மனைவிக்கும் BP ஏறிக்கொண்டிருந்தது.

எப்போதும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன். பின்னர் ஏன் BLOOD PRESSURE அதிகரிக்கிறது என புரியாமலிருந்தேன்.

பின்னர் தான் தெரிந்தது அளவுக்கு அதிகமாக நாங்க உப்பை பயன்படுத்திகிறோம்.

நம் மனித உடல் என்ன ஓர் அற்புதம்..

ஆச்சரியமாக உள்ளது. பிறந்ததிலிருந்து 80 ஆண்டுகள் வரை இதயம் ‘லப் டப்’ என துடித்துக் கொண்டிருக்கிறது.

இதை வேறு எந்த மெஷினாலும் செய்ய முடியுமா? எவ்ளோ விஞ்ஞானிகள் இருந்தாலும் ஒரு துளி ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியுமா?

இதெல்லாம் தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அவர்களை பார்த்தால் சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajinikanth latest speech about his health condition

சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். அந்த படம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரும் அந்தப் படம் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி பட தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இது இயக்குநர் பாலாவுக்கு பெரும் அவமானத்தை உண்டாக்கியது.

அதன் பின்னர் சில ஆண்டுகளில் நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வந்தார் பாலா.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார் சூர்யா.

இதுவும் பாலாவிற்கு திரையுலகில் பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இதனால் பாலா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் தனக்கு நடிக்க விருப்பம் என விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மாறு கண் உடையவராக விஷால் நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Vishal wants to act in the direction of Bala again

More Articles
Follows