தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“ரஜினிகாந்த் சொன்னபடி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.
மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறும் ரஜினி கூறவில்லை.
மே 23-ம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும்.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இடையிலான நட்பு என்றைக்கும் நிலைக்கும்… ” என்றார் சத்யநாராயணராவ்