தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு தனியார் கல்லூரியில் திறந்து வைத்தார்.
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே என தன் வழக்கமான உரையுடன் பேச்சை துவங்கினார் ரஜினிகாந்த்.
அதன்பின் அவர் பேசியதாவது….
இது ஒரு கல்லூரி விழா போல் இல்லை. என் ரசிகர்கள் ஒரு மாநாடு போல் நடத்திவிட்டனர்.
வருகிற வழியெங்கும் கட்அவுட் பேனர்கள் என வைத்துவிட்டனர்.
இதுபோல் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதை நாம் மீறிவிட்டதாக நினைக்கிறேன். இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.
மக்களுக்கு இடைஞ்சல் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.
Rajini apologies to TN People because of his fans banners on Chennai Road