ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன். அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ராஜபீமாவிற்கு எப்படி இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன். ஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டார். நான் அவரது பின்னணி இசையுடன் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது, மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜபீமாவின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திங்க் மியூசிக் பல ஆல்பங்களை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் புகழ்பெற்றது. ராஜபீமா சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மனிதன் – மிருகம் முரண்பாடுகளை பற்றி பேசும் இந்த ராஜபீமா, பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படப் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Breaking ராதாரவியே உங்களை பெற்றவளும் பெண்தானே; நயன்தாரா கண்டனம்

Breaking ராதாரவியே உங்களை பெற்றவளும் பெண்தானே; நயன்தாரா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Opens Up on Radha Ravis Sexist Commentsகொலையுதிர் காலம் பட விழாவில் ராதாரவி பேசும் போது நயன்தாராவின் நடத்தை குறித்து கடுமையாக பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலிம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

நானே விலகிக் கொள்கிறேன் எனவும் ராதாரவி இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் எந்த விழாவுக்கு வராதா நயன்தாரா தற்போது திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

”நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.

ராதாரவி உள்ளிட்ட பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான்.

பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள்.

இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான ‘ஆண்மை’ மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பச்சாதாபப்படுகிறேன்.

மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார்.

பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர்பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும்.

நல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள்.

எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.

கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?

இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்”.

இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara Opens Up on Radha Ravis Sexist Comments

Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official announcement of Ner Konda Paarvai release date is hereஅமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பிங்க்’.

இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும் வாழ்த்தினர்.

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு ’நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று படங்கள் வரும். அல்லது முன்னதாக வியாழக்கிழமையன்று படத்தை வெளியிடுவார்கள். தற்போது முதன்முறையாக சனிக்கிழமை வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

Official announcement of Ner Konda Paarvai release date is here

நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam Warns Radha Ravi Over Nayanthara Commentsகொலையுதிர் காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா பற்றி கடுமையாக விமர்சித்தார் ராதாரவி. இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு…

பெறுநர் :
திரு.ராதாரவி அவர்கள்,
எண்.9 1வது தெரு, போயஸ் ரோடு,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

அன்புடையீர் வணக்கம் ..!

சமீபத்தில் நடந்த “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய “இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது ..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக்கண்டிக்கிறது..!

இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..!

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!

ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!

அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி !
(M. நாசர்)
தலைவர்

Nadigar Sangam Warns Radha Ravi Over Nayanthara Comments

நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி..; கடுப்பான விக்னேஷ் சிவன்

நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி..; கடுப்பான விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meetநயன்தாரா நடிப்பில் சக்ரி டுலெட்டி இயக்கியுள்ள படம் கொலையுதிர் காலம்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் வழக்கம்போல நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. மேலும் இயக்குனர் சக்ரி டுலெட்டியும் கலந்துக் கொள்ளவில்லை. படத்தயாரிப்பாளர் மதியழகன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ராதாரவி பேசும்போது…

முன்னணி நடிகர்களுடன் நயன்தாராவை கம்பேர் செய்ய கூடாது. அவர் சிறந்த நடிகைதான். ஒரு பக்கம் பேயாகவும் இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள்.
ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தன் கண்டனத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.

‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்.

இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது.

இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

Vignesh Shivan‏Verified account @VigneshShivN

Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless ! Sad to see audience laughing& clapping for his filthy comments! None of us

None of us had any idea that this event was going to take place for an incomplete film .. the actual producers or directors left the film few years back I guess! Inappropriate event wit unnecessary people sitting and knowing not what to speak ! If this is called promoting a movie

In 2017, Mr.Radha Ravi made a crass insensitive comment about children with disabilities. It is men like Mr.Radha Ravi who perpetuate & glorify the violence against women & children.

In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.

Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meet

MR ராதாவின் கொள்ளுப்பேரனை மணந்த பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள்

MR ராதாவின் கொள்ளுப்பேரனை மணந்த பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban Seethas daughter Abinaya weds Naresh Karthik news updatesநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகர் எம். ஆர். ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (நடிகர் எம். ஆர். ராதாவின் கொள்ளுப்பேரன்).

திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் வருமாறு…

நடிகர் ராதா ரவி, திருமதி லதாரஜினிகாந்த், R. B சௌத்ரி, இயக்குனர் எழில், லேனா தமிழ் வாணன், A. P ஸ்ரீதர், SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர், மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஈஸ்வரி ராவ், DTR ராஜா, அட்வகேட் ராஜசேகர், நிரோஷா, சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி, இயக்குனர் விக்ரமன், மயில் சாமி, மோகன்,சித்ரா லக்ஷ்மணன், ஐக் ஹரி, தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார், R பாண்டியராஜன், பிரித்திவிராஜன், JSK சதிஷ், பானு ப்ரியா, நல்லி குப்புசாமி செட்டியார், சூரி, ஒளிப்பதிவாளர் சுகுமாரன், சத்யஜோதி தியாகராஜன், நடிகை அருணா, இயக்குனர் KS ரவிக்குமார், நடிகை சாரதா, ராஜ ஸ்ரீ, சச்சு, வெந்நீராடை நிர்மலா போன்ற திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Parthiban Seethas daughter Abinaya weds Naresh Karthik news updates

Parthiban Seetha daughter Abinaya wedding

 

More Articles
Follows