கலகத் தலைவனுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு புரியல – நடிகர் ஆரவ்

கலகத் தலைவனுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு புரியல – நடிகர் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் ஆரவ் பேசியதாவது…

“இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்த ஆஹாவுக்கு நன்றி. ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது.

தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார். தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு மாதங்கள் ஆவது ஆகும்.

ஆனால், இவர் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார்.

டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், விவேக், யாசர் என இவர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப குழு அனைவரும் சிறப்பாக தங்கள் பணியை கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

இதன் பின்பு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

I don’t know what to do after Kalaga Thalaivan – actor Aarav

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஸ்பாட் எங்களுக்கு ரீயூனியன் தான் – சந்தோஷ் பிரதாப்

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஸ்பாட் எங்களுக்கு ரீயூனியன் தான் – சந்தோஷ் பிரதாப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…

“நேற்றுதான் ‘கொன்றால் பாவம்’ படத்திற்காக உங்கள் அனைவரையும் சந்தித்தது போல உள்ளது. இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.

குழந்தைகளுக்கு எல்லாம் எப்போது பள்ளி விடுமுறை முடியும், நண்பர்களை சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும்.

அது போலதான் எனக்கு இந்த டீமும். எங்களுக்குள் இருந்த நட்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. நண்பர்களாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த அதே சமயத்தில் வேலையும் செய்தோம்.

என்னுடைய ‘கதிர்’ என்ற திரைப்படம் தியேட்டருக்கு வந்து பிறகு ஓடிடிக்காக நாங்கள் போராடிக் கொண்டிருந்த பொழுது ஆஹா எங்களுக்கு உதவியது. அதற்கு நன்றி! இந்த படத்திலும் தயாரிப்பு வகையில் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

நாங்கள் அனைவரும் நண்பர்கள் ரீயூனியன் செய்தது போல தான் இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

‘கொன்றால் பாவம்’ படத்தை போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள் என வேண்டுகோள் வைக்கிறோம்” என்றார்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

The ‘Maruti Nagar Police Station’ movie is a reunion for us – Santhosh Prathap

இப்போ வர்ற படத்துல சர்ச்சையை வச்சுடுறாங்க..; போட்டுத்தாக்கிய வரலட்சுமி

இப்போ வர்ற படத்துல சர்ச்சையை வச்சுடுறாங்க..; போட்டுத்தாக்கிய வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்‌ஷ்மி பேசியதாவது…

“உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார்.

ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.

த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதையெல்லாம் மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்கள்.

இந்த படத்துடன் ஆஹா இணைந்திருப்பது மகிழ்ச்சி இந்த படத்தின் நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆரவ், அப்பொழுதுதான் பிக் பாஸில் டைட்டில் வென்று வெளியே வந்த சமயம். ஆரவ், சந்தோஷ் என நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பதாலும் இந்த படம் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம்.

விவேக் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தில் அவர் ஒரு கண்டுபிடிப்பு. அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவே இந்த படத்தில் அவரை நான் பரிந்துரைத்தேன்.

அது இயக்குநருக்கும் திருப்தி அளித்தது மகிழ்ச்சி. எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது என்பதால் ஊடக நண்பர்கள் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்றார்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

They are creating controversy in now a days films – Varalakshmi

மாமா எங்க இருக்கீங்க? எல்லாம் முடிஞ்சிட்டு நினைச்சேன்.; பாத்திமா விஜய் ஆண்டனி கண்ணீர்

மாமா எங்க இருக்கீங்க? எல்லாம் முடிஞ்சிட்டு நினைச்சேன்.; பாத்திமா விஜய் ஆண்டனி கண்ணீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் இந்த வாரம் மே 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த படத்தை அவரை இயக்கி இசையமைத்து எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றது.

இதில் விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா மேடை ஏறி பேசினார்.

அவர் பேசும்போது மிகவும் உருக்கமாக விஜய் ஆண்டனிக்கு நடந்த விபத்து குறித்து பேசினார்.

“மாமா எங்கே இருக்கீங்க? இன்று உங்கள் முன்னால் இருக்கிறார். நீங்கள் அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த பொங்கல் சமயத்தில் அவரது உதவியாளர் எனக்கு போன் செய்தார்.

சாருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சுய நினைவின்றி தண்ணீரில் மூழ்கி விட்டார் என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று கூட நினைத்தேன்.

அதன் பின்னர் ஒவ்வொரு நண்பர்களும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் காட்டிய அன்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. இவ்வளோ பேர் அவருக்காக இருக்கும்போது அவருக்கு ஒன்று நடக்காது என்ற நம்பினேன்.

இன்று அவர் மீண்டு வந்திருக்கிறார் எல்லாம் பாசிட்டிவாக இருக்கிறது. பிச்சைக்காரன் 2 படத்தில் நிறைய ரொமான்ஸ் செய்துள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்று பேசினார் பாத்திமா.

Where are you? I thought everything was over. Fathima Vijay Antony tears

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்காதது ஏன்.? இயக்குனர் சசி விளக்கம்

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்காதது ஏன்.? இயக்குனர் சசி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நாயகனாக நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு Pre Release Event சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற இயக்குநர் சசி பேசுகையில்…

“விஜய் ஆண்டனியிடம் எப்போதுமே ஒரு சாமானியனின் பார்வை இருக்கும். சாமானியனின் டெஸ்ட் அவரிடம் உள்ளது. அதுதான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

‘பிச்சைக்காரன்’ படம் இயக்கிக் கொண்டிருந்தபோது நான் சாதாரணமாக வைத்த ஒரு காட்சியை புகழ்ந்து பேசினார்.

அதன்பின்னர் படம் ரிலீசான பிறகு அந்தக் காட்சியை தியேட்டரில் மக்கள் கைதட்டி ரசித்தனர்.

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க வேண்டும் என அவர் என்னிடம் சொன்னார்.

ஆனால், நான் ‘100 கோடி வானவில்’ என்ற படத்தை இயக்குவதால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை.” என்றார்.

Why didn’t you direct the movie ‘Pichaikaran 2’? Director Sasi explained

‘பிச்சைக்காரன் 2’ படம் சசி எனக்கு போட்ட பிச்சை.; மனம் திறந்த விஜய் ஆண்டனி

‘பிச்சைக்காரன் 2’ படம் சசி எனக்கு போட்ட பிச்சை.; மனம் திறந்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நாயகனாக நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு Pre Release Event சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனி பேசியதாவது இயக்குநர் சசியை பற்றி புகழ்ந்து பேசினார்.

“டிஷ்யூம் படத்தில் இசையமைக்க இயக்குநர் சசி வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது.

‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்குப் போட்ட பிச்சை. இனிமேல் நான் எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல ஒரு படம் எனக்கு கிடைக்காது.

‘பிச்சைக்காரன் 2’ படத்தை நீங்கள்தான் (சசி) இயக்க வேண்டும் என காத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

‘பிச்சைக்காரன்2’ சூட்டிங் ஆரம்பித்து 10 நாட்கள் படம் என் கைக்குள் வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் கைவசமானது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் டைரக்‌ஷனை நான் கற்றுக் கொண்டேன்.

‘பிச்சைக்காரன்’ படத்தின் காப்பியாகத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.” என்றார்.

Vijay Antony praised director sasi for pichaikkaran 2 movie

More Articles
Follows