மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது.

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்.

இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.

மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.

கொடுப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும் என்பார்கள். லாரன்ஸ் அவர்களுக்கு தெய்வம் ஒருபோதும் கொடுப்பதை நிறுத்தாது என்ற நம்பிக்கையை அவர் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்க அவரது சேவை!

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான டைட்டில் வைக்கும் அட்லி

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான டைட்டில் வைக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இயக்கிவரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக மைக்கேல் என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ந் தேதி பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு விஜய் ரசிகர்களை கவரும் வகையில் வெறி, வெறித்தனம், கேப்டன் மைக்கேல் (CM) உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

விஜய்க்கு கதை சொன்ன ‘மாநகரம்’ பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

விஜய்க்கு கதை சொன்ன ‘மாநகரம்’ பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வருவதால் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் விஜய்யை சந்தித்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை சொல்லி இருக்கிறாராம்.

அதற்கு விஜய்க்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம். எனவே விரைவில் அவர் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.

கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கொலைகாரனுக்கு U/A சர்ட்டிபிகேட் கொடுத்து பாராட்டிய சென்சார்

கொலைகாரனுக்கு U/A சர்ட்டிபிகேட் கொடுத்து பாராட்டிய சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)அர்ஜூன் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இதில் ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார்.

நாயகன் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சென்சாரில் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

மேலும் படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

ரம்யாவை காதலிக்கும் 3 நண்பர்கள். நட்புன்னா என்னானு தெரியுமா.?

ரம்யாவை காதலிக்கும் 3 நண்பர்கள். நட்புன்னா என்னானு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)வருகிற மே 17ஆம் தேதி 3 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர். லோக்கல், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் மற்றும் கவின் நடித்துள்ள நட்புன்னா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் கவின் என்பவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

நவீன் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். சிவா அரவிந்த என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.

இவர்களுடன் அருண்ராஜா காமராஜா, இளவரசு, அழகம்பெருமாள், மன்சூரலிகான், மொட்ட ராஜேந்திரன், ரமா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மூன்று நண்பர்களுக்கு ஒரே பெண்ணின் மீது காதல் வருகிறது. அதனால் அவர்கள் நட்பிலும் வாழ்க்கையிலும் ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் சொல்ல வருகிறதாம்.

யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

அசாருக்கு கடல போட பொண்ணு கிடைச்சிடுச்சி… மனிஷாஜித் மாட்டிக்கிட்டார்

அசாருக்கு கடல போட பொண்ணு கிடைச்சிடுச்சி… மனிஷாஜித் மாட்டிக்கிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான “கடல போட பொண்ணு வேணும்” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.

சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, “எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான “கடல போட பொண்ணு வேணும்” பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்” என்றார்.

More Articles
Follows