தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் செய்து வருகிறது.
இதற்கு கோடிக்கணக்கான தொகை தேவைப்படுவதால் மக்களிடம் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்திய அரசு.
இதனையடுத்து பல பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.
நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாயை உதவி தொகையாக அளித்தார்.
அதை பிரதமரின் PM Cares நிதி, தமிழக முதல்வர் நிவாரண நிதி, FEFSI சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் என பலருக்கும் பிரித்துக் கொடுத்தார் லாரன்ஸ்.
அதற்கு பிறகும் நிதி உதவி கேட்டு லாரன்ஸுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறது. அவர்களுக்கு உதவ முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார் லாரன்ஸ்.
அதனால் தூக்கம் இழந்து தவித்துள்ளார். ஒரு முக்கிய முடிவை எடுக்க அதை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆடிட்டரிடம் ஆலோசனை செய்திருக்கிறாராம்.
அதன்படி ஏப்ரல் 14ல் தமிழர் புத்தாண்டு அன்று தன் அடுத்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.