3 கோடி தான் கொடுத்தேன்.. இன்னும் செய்யனும்…; ஏப்ரல் 14ல் லாரன்சின் அடுத்த அறிவிப்பு

3 கோடி தான் கொடுத்தேன்.. இன்னும் செய்யனும்…; ஏப்ரல் 14ல் லாரன்சின் அடுத்த அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrenceகொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் செய்து வருகிறது.

இதற்கு கோடிக்கணக்கான தொகை தேவைப்படுவதால் மக்களிடம் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்திய அரசு.

இதனையடுத்து பல பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாயை உதவி தொகையாக அளித்தார்.

அதை பிரதமரின் PM Cares நிதி, தமிழக முதல்வர் நிவாரண நிதி, FEFSI சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் என பலருக்கும் பிரித்துக் கொடுத்தார் லாரன்ஸ்.

அதற்கு பிறகும் நிதி உதவி கேட்டு லாரன்ஸுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறது. அவர்களுக்கு உதவ முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார் லாரன்ஸ்.

அதனால் தூக்கம் இழந்து தவித்துள்ளார். ஒரு முக்கிய முடிவை எடுக்க அதை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆடிட்டரிடம் ஆலோசனை செய்திருக்கிறாராம்.

அதன்படி ஏப்ரல் 14ல் தமிழர் புத்தாண்டு அன்று தன் அடுத்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

கொரானா ஊரடங்கு.. வீட்டில் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா..?

கொரானா ஊரடங்கு.. வீட்டில் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசை பரவாமல் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.

சினிமா நடிகர்களும் ஏதாவது ஒன்றை செய்து அதை வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை வீட்டிலேயே அமர வைத்து மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்பு அவரது வீட்டில் சமைத்து வருகிறாராம்.

இதை அவரது நண்பர் மஹத் வீடியோ காலில் பேசி பதிவிட்டுள்ளார்.

அந்த படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

சிம்பு தற்போது எந்த சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவதில்லை.

ஆனால் சிம்புவின் இந்த குக்கிங் போட்டோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது எனலாம்.

simbu

கேரளாவுக்கு அள்ளி கொடுத்த விஜய் சேட்டா… என்டே தமிழ்நாடு ஓர்ம உன்டோ.?

கேரளாவுக்கு அள்ளி கொடுத்த விஜய் சேட்டா… என்டே தமிழ்நாடு ஓர்ம உன்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy fans upset with Vijays silence in Corona relief fund கடந்த 2018ல் ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத கன மழையை கேரளா சந்தித்தது.

இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகள் உடமைகளை இழந்து தவித்தனர்.

அப்போது கேரளா மீண்டு வர உலகெங்கும் இருந்து பல நிதியுதவிகள் வழங்கப்பட்டன. ஒரு வழியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்தனர் மலையாளிகள்.

தமிழில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கினர்.

அப்போது கேரளாவில் அதிகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்யும் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

நம் தளத்தில் கடந்த 2018ல் வெளியான செய்திக்கான லிங்க் இது…

https://www.filmistreet.com/cinema-news/actor-vijay-donates-rs-70-lakhs-to-kerala-flood-relief/

கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் )

இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல ஆயிரம் சினிமா தொழிலாளர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் இதுவரை கொரோனா தொடர்பான ஒரு விழிப்புணர்வு அறிக்கை கூட விடவில்லை.

தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சினிமாவுக்கும் சரி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் சரி இதுவரை விஜய் ரூ. 1 கூட வழங்கவில்லை.

அவர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்பது அவர்களது ரசிகர்களையே குழப்பமடைய வைத்துள்ளது.

சில விஜய் ரசிகர்களால் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் (கொரோனா) நிவாரண நிதிக்கு நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே நிதி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர்கள் நடிகையர் பெப்சி தொழிலாளர்களுக்கு வாரி கொடுத்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thalapathy fans upset with Vijays silence in Corona relief fund

அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

அவுட்டிங் வராத அஜித்; அலீஷா சொன்ன சீக்ரெட்.. இதெல்லாம் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajithநடிகர் அஜித் ஒரு தீவிர பைக் பிரியர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவர் பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிகம் கலந்துக் கொண்டுள்ளார்.

இவருடன் கலந்துக் கொண்டவ்ர்களில் ஒருவர் பெண் ரேஸர் அலீஷா அப்துல்லா.

இவர் நடிகர் அஜித் பற்றி ஒரு விஷயத்தை ட்விட்டர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தன் திரைப்பட புரமோசன்களில் கூட கலந்துக் கொள்ளாதது ஏன்? என தெரிவித்துள்ளார்.

அஜித்தை கண்டால் ரசிகர்கள் தனியாக விடமாட்டார்கள் என்பதால் தான் அவர் வெளியே வருவதில்லை.

பைக் ரேஸ் டிராக்கில் அவரை நடக்கக்கூட யாரும் விடமாட்டார்கள். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியாது. இதனை நானே பார்த்திருக்கிறேன்.

இதனால் தான் அஜித் வெளியே வர கூடாது என முடிவெடுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். (See below pic)

அஜித்தை விட எத்தனையோ பெரிய பெரிய விஐபிக்களை நாம் பார்த்திக்கிறோம். அவர்களை விடவா அஜித்துக்கு பெரிய கூட்டம் உள்ளது.

அவர்கள் எல்லாம் வெளியே வருவதில்லையா..? இதெல்லாம் ஒரு காரணமா..? சரி அது அஜித்தின் இஷ்டம் என்று விட்டுவிடுவது தான் நல்லது.. நமக்கேன் ஏன் வம்பு..

First women bike racer Alisha Abdulla reveals secret of Ajith

Why ajith does not come out

நாய் பாடிய கொரோனா சாங்.; வீடியோ பதிவிட்ட இசையமைப்பாளர் சாம் CS

நாய் பாடிய கொரோனா சாங்.; வீடியோ பதிவிட்ட இசையமைப்பாளர் சாம் CS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dog Sung Corona virus song Video goes viralகொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஊரடங்கு மே 1 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்க பிடித்தவற்றை செய்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.

ஒரு சிலர் கொரோனா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலை நாய் அழகாக பாடுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவை அவர் எங்கோ பார்த்து பகிர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Dog Sung Corona virus song Video goes viral

https://www.instagram.com/p/B-voySZjLn4/

பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் இணைந்த தமிழர் Dr அப்துல் ஹலீம்

பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் இணைந்த தமிழர் Dr அப்துல் ஹலீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kentucky Colonel award for Guinness fame Dr Abdul Halim அமெரிக்காவின் கெண்டகி மாகாண அரசின் உயர்ந்த Kentucky Colonel விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளரும் தவில் கலைஞருமான Dr. அப்துல் ஹலீம் அவர்களை அமெரிக்க கெண்டகி மாகாண அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த உயர்ந்த விருது இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் H.W புஷ், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர். அப்துல் ஹலீம் இதற்கு முன்னர் ஜார்ஜியா நாட்டு அரசாங்க விருதான KNIGHT விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார்..? இந்த டாக்டர். அப்துல் ஹலீம் , இவர் இதுவரை அப்படி என்ன சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பற்றி பார்க்கலாம்….

இவருடைய இயற்பெயர் ராஜராஜன். பின்னர் தனது பெயரை அப்துல் ஹலீம் என மாற்றிக்கொண்டார். இவரது தந்தை பெயர் நடராஜன், தாய் பெயர் ஹேமலதா. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் வசித்து வருகிறார்,

இவருடைய அம்மா கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தை சார்ந்தவர், இவரது தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் , இவரது தாய் பாடகி.

அதனாலே இவருக்கு இசை மீதான ஆர்வம் தோன்றியது. இசை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சிறு வயது முதல் எங்கு இசை கச்சேரி இருந்தாலும் அங்கு சென்று விடுவார்.

இசை மீது கொண்ட ஆர்வத்தினால் குமரி மாவட்டம் அய்யன்பாறவிளையை சார்ந்த கிருஷ்ணன் ஆசான் என்பவரிடம் முறைப்படி தபேலா கற்றுக்கொண்டார். அதனால் அப்துல் ஹலீம் உடைய முதல் குரு கிருஷ்ணன் ஆசான் ஆவார்.

பின்னர் உலக பிரபல கடம் வித்வான் திரு. வி. சுரேஷ் அவர்களிடம் கடம் கற்றுக்கொண்டார்.

அகில இந்திய வானொலி நிலையத்தில் “A” கிரேட் கடம் வித்வானாக உள்ள அப்துல் ஹலீம் பல மேதைகளுடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

தனது பள்ளி படிப்பை முடித்த பின், இசையில் ஆர்வம் மிகுந்த அப்துல் ஹலீம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.music (Bachelor of Arts in Music) சேர்ந்து படிக்கத் துவங்கினார்.

பின்னர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் M.A (Master of Arts in Music) படித்தார். பின்னர் மேலும் படிக்கவேண்டும் என கூறி தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சையில் M.Phil In Music படித்தார்.

World records university, UK இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இவருடைய சாதனைகள்:

1) உலகின் வேகமான கடம் வாசிப்பாளர்:
இந்த சாதனையை இவர் 2011 ஆம் ஆண்டு தக்கலையில் நிகழ்த்தியுள்ளார். ஒரு வினாடிக்கு 20 பீட்டு அதாவது ஒரு நிமிடத்திற்கு 1220 பீட்டுகளை வாசித்துள்ளார். இந்த சாதனையை India Book Of Records , Asia Book Of Records and World Fastest Drummer America ஆகியோர் அங்கீகரித்தனர்.

2) உலகின் வேகமான டாம்பரின் வாசிப்பாளர்:
டாம்பரின் என்பது ஒரு கையால் தட்ட கூடிய இசைக் கருவி. இதில் நிமிடத்திற்கு 732 பீட்டுகளை வாசித்து இந்த சாதனை படைத்தார். 2011ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர்.

3)உலகின் வேகமான ஜெம்பே வாசிப்பாளர்:
ஜெம்பே இசைக்கருவி பெரும்பாலும் தென்னாப்பிரிக்க நாட்டில் பயன்படுத்தப்படுத்தக்கூடியது. இதில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் பீட்டுகள் வாசித்துள்ளார். இந்த சாதனையை 2011 ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர

4)உலகின் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு:
168 மணி நேரம் அதாவது தொடர்ந்து ஏழு நாள்கள் கடம் வாசித்து இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையில் இவருடன் 14 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த சாதனையை நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் வைத்து நிகழ்த்தினார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தது.

5)உலகிலேயே அதிக நேரம் தொடர்ந்து செண்டை வாசிப்பு:
கடந்த 2012-ம் ஆண்டு எட்டு மணி நேரம் முப்பது நிமிடம் தொடர்ந்து செண்டை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

6)உலகில் வேகமான கடம் வாசிப்பாளர்:
ஒரு மணி நேரத்தில் 57,600 பீட்டுகளை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

7)உலகில் மிகப்பெரிய கடம் :
உலகின் மிகப்பெரிய கடம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த கடத்தின்உயரம் 11 மீட்டரும் , விட்டம் 2.52 ம் கொண்டது. இந்த கடத்தை வாசித்ததின் மூலம் உலகின் மிகப்பெரிய கடம் செய்ததற்கான சாதனையை படைத்தார் .இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் , லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றது.

8)உலகில் அதிக நேரம் தொடர்ந்து உடுக்கு வாசித்தது:
5 மணி நேரம் 46 நிமிடங்கள் தொடர்ந்து உடுக்கு வாசித்துள்ளார். இந்த சாதனையை கடந்த 2012-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் நிகழ்த்தினார்.இந்த சாதனையை India Book Of Records அங்கீகரித்தது.

9)உலகில் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு :
இது ஒரு மாரத்தான் வாசிப்பு ஆகும். தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது கடம் வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடன் சேர்ந்து சில மாணவர்கள் கடம் வாசித்தனர். இதனை வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நிகழ்த்தினார்.இந்த சாதனையை Record Holders Republic அங்கீகரித்தது.

10) உலகின் நீண்ட மற்றும் பெரிய கடம் கச்சேரி:
இந்த சாதனையை இவர் உடன் நூறு மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் கடம் கச்சேரி நடத்தி இந்த சாதனையை நடத்தியுள்ளனர். இந்த சாதனை பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்து உள்ளது. இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.

Kentucky Colonel award for Guinness fame Dr Abdul Halim

More Articles
Follows