தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் பல படங்களில் பல வேடங்களை போட்டு அசத்தியவர் டத்தோ ராதாரவி.
அதுபோல் பல கட்சிகளிலும் இவர் இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்.
இவர் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து கேவலமாக நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் பேசினார்.
இதனையடுத்து நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனையடுத்து அதிமுகவில் இணைந்தார்.
சில மாதங்களுக்கு பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராதாரவி.
இவர் மேடைகளில் பேசினாலே ஏதாவது பரபரப்பு உண்டாகும். தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த நிகழ்ச்சியும் இல்லை.
இந்த நிலையில் இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.
அதில்…
அடுத்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.
நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட 2 முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருப்படாது..
ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம்.
நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார்.
தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு ஹிந்தி தெரியும் என்று சொன்னவர் கருணாநிதி.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
Radharavi praises super star rajinikanth