நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…:

“நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், என்னைப் பற்றிய, என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி.

என் இன்றைய நிலைக்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன். என் கடவுள் நம்பிக்கைதான்.

நான் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் எதையுமே வாழ்க்கையில் மறைத்தவனே கிடையாது.

இப்போதுதான் விமான நிலையம் வந்தேன், அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் ஒரு சாதாரண நடிகன், கலைஞன், லட்சிய திமுக என்ற சிறிய கட்சியை நடத்தக்கூடிய சாதாரண ஒரு ஆள்.

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

என்மீது பாசம் வைத்து, ஆதரவு காட்டி, பரிவோடு நான் நல்லாயிருக்க வேண்டும் என்று பலர் செய்த பிரார்த்தனைகள், ஆராதனைகளால்தான் இன்று நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய கட்சிக்காரர்கள், அபிமானிகள், என்னுடைய ரசிகர்கள், மகன் சிம்புவின் ரசிகர்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்கள், போனில் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தவர்கள், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.

I am a normal person ; TR melting speech before going to treatment

கேரளாவில் மீட்டிங்.. சிரஞ்சீவியுடன் பார்ட்டி.. முதல்வருடன் சந்திப்பு.; ‘விக்ரம்’ விளம்பரங்களில் கமல் ஓவர் பிஸி

கேரளாவில் மீட்டிங்.. சிரஞ்சீவியுடன் பார்ட்டி.. முதல்வருடன் சந்திப்பு.; ‘விக்ரம்’ விளம்பரங்களில் கமல் ஓவர் பிஸி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் ஜூன் 3ல் ரிலீசானது.

அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை இந்தப் படம் பெற்றிருப்பதால் பல சாதனைகளை உடைத்து வசூல் வேட்டை படைத்து வருகிறது.

கடந்த 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டதாம் ‘விக்ரம்’.

படத்தின் வெளியீட்டுக்கு முன்பே விக்ரம் புரோமோசன்களில் பிசியாக உலகம் சுற்றி வந்தார் கமல்ஹாசன்.

தற்போது படத்தின் வெற்றியால் கமல் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினார்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு லெக்சஸ் காரை பரிசாக வழங்கினார்.

கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்குகளை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கமல்.

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

5 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டார் கமல்.

கேரளாவில் பட வெற்றி விழா சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் & அனிருத் பங்கேற்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் & லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

இந்த நிலையில், ‘விக்ரம்’ வெற்றியையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் கமல்.

இந்த சந்திப்பின் போது.. விக்ரம் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

‘விக்ரம்’ ரிலீஸ் சமயத்தில் முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்திருந்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan busy in ‘Vikram’ movie promotions

குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து.. 7 வருடத்திற்கு பிறகு சூட்டிங்கை தொடங்கிய ஹலிதா

குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து.. 7 வருடத்திற்கு பிறகு சூட்டிங்கை தொடங்கிய ஹலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் “லோனர்ஸ்” போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன.

இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில அவர் ஒரு நோக்கத்திற்காக அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாக துவங்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

இது அவரது லட்சியத் திரைப்படமான ‘மின்மினி’ பற்றியது, அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகள் முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது.

குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதை. இதன் முதல் பகுதியை, அவர் 2015 ஆம் ஆண்டில், குழந்தை பருவ பகுதிகளை படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடைந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், அவரது இந்த புது முயற்ச் கோலிவுட்டில் மட்டுமின்றி மற்ற பிராந்திய திரைதுறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர்கள் இந்த திரைப்படத்திற்கான அவரது முழுமையான உழைப்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிரமிப்பில் உள்ளனர். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா போன்ற திறமையான கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் பணியாற்றுகின்றனர்.

ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டராக உள்ளார், இந்த கனவு திரைப்படம் உருவாக முழு முதல் காரணமாகவும், முழு ஆதரவாகவும் இருந்ததாக ஹலிதா கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.

இயற்கைச் சீற்றங்கள், நிதிச் சிக்கல்கள் போன்றவற்றால் சில படங்கள் முடங்கியுள்ளன, இடை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ‘மின்மினி’ திரைப்படம் அப்படியல்லாமல் மிகவும் தீவிரமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். இதன் கதை முற்றிலும் இயற்கையானது மிகவும் யதார்த்தமானது.

மின்மினி படத்தில் எஸ்தர் அனில் (‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஹலிதாவின் முந்தைய படமான “பூவரசம் பீப்பீ” படத்தில் பிரவீனும் கௌரவும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மின்மினி” படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Halita who started shooting after 7 years

கோவை சரளாவுக்கு பட்டம் கொடுத்து ‘செம்பி’ படக்குழுவினரை வாழ்த்திய கமல்

கோவை சரளாவுக்கு பட்டம் கொடுத்து ‘செம்பி’ படக்குழுவினரை வாழ்த்திய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘செம்பி’படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது ‘செம்பி’ படத்தின் டிரைலரை கமல்ஹாசன்
பார்த்து வெகுவாக பாராட்டினார்.

செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன்,
ஏ .ஆர் .எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டினார்.

செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Kamal Haasan wishes Sembi team

அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்.; விவசாயியாக மாறிய உயர்ந்த நடிகர்

அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்.; விவசாயியாக மாறிய உயர்ந்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். இவர் மிகவும் உயரமான நடிகர்.

இவர் ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர்களின் வானவராயன் வல்லவராயன் என்ற கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் பல படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடித்து வந்தார்.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி…’ என்ற பாடல் பிரபலமானது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ, ஊர்வசி நடித்திருந்தனர்.

பின்னர் சில ஆண்டுகள் சினிமா விட்டு விலகி தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். மத்திய அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் நெப்போலியன்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘போக்கிரி’ படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து இருந்தார்.

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி கொண்டிருந்தாலும் இவர் செட்டில் ஆனது அமெரிக்காவில்

அமெரிக்காவில் உள்ள டென்னசே மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் வசிக்கும் பகுதியிலும் விவசாயம் செய்து வருவதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

Tamil actor Napoleon turns farmer

ரஜினி நடிக்க மறுத்த சந்திரமுகி 2 படத்தை வாங்கியது லைகா.; டைரக்டர் ஹீரோ அப்டேட்

ரஜினி நடிக்க மறுத்த சந்திரமுகி 2 படத்தை வாங்கியது லைகா.; டைரக்டர் ஹீரோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005ல் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி.

இதில் ரஜினியுடன் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பல பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வாசு பல முயற்சிகளை மேற்கொண்டார். நான் ரெடி ரஜினிகாந்த் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஆனால் ரஜினிகாந்த் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார்

இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார் வாசு.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க சம்மதிக்கவே அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது

இந்த நிலையில் படத்தின் தலைப்பை பெறுவதில் முதல் பாகத்தைத் தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் பெற்று உள்ளது.

இதற்காக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் (டைட்டில் மட்டும்) கொடுத்து லைகா விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சந்திரமுகி 2 உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது.

கூடுதல் தகவல்..:

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2

Chandramukhi 2 official announcement is here

More Articles
Follows