தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குளோபல் பிலிம்ஸ் சார்பில் தொழிலதிபர் டில்லி ஆர்.சிவா தயாரித்துள்ள படம் ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’.
மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுகம் திவ்யா ஹீரோயி-னாக நடிக்கிறார்.
இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர், ‘லொள்ளு சபா’ மனோ¬கர், மூர்த்தி, ஈ. ராமதாஸ், நெல்லை சிவா, டில்லி ஆர். சிவா, முத்துக்¬காளை, சுப்புராஜ், டவுட் செந்தில், மிப்பு, கலக்கல் சத்யா ஆகியோ¬ரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்¬கதை, வசனம் எழுதி ஏ.ஆர். சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலைப்புலி தாணு, கலைப்புலி ஜி.சேகரன், ஜாக்குவர் தங்கம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
கலைப்புலி ஜி. சேகரன் பேசும்போது…
திரையுலகில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் அதை தடுக்காமல் ரஜினி, கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு செல்ல நினைக்கிறேன் என பேசினார்.
அதற்கு அடுத்து பேசிய கலைப்புலி தாணு அவர்கள் கூறியதாவது…
அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் கலைத்துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்தனர்.
அவர்கள் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தனர். அதுப்போல் நம் துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும்.
ரஜினி, கமல் அவர்கள் அரசியலுக்கு வந்து நல்லாட்சியை கொடுக்க விரும்புகின்றனர். அதை நாம் வரவேற்க வேண்டும்” என பேசினார்.
Producer Kalaipuli Thanu welcomes Rajini and Kamal political Entry