தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.
இதனை PS 1 என்றும் அழைக்கின்றனர். இதனை தமிழ் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்கின்றனர படக்குழுவினர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி…
ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா.
பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர்.
சேந்தனாக அமுதன் – அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிப்பதாக வெளியானது.
இந்த பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
Ponniyin Selvan Character introduction out