‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

இதனை PS 1 என்றும் அழைக்கின்றனர். இதனை தமிழ் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்கின்றனர படக்குழுவினர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி…

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர்.

சேந்தனாக அமுதன் – அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிப்பதாக வெளியானது.

இந்த பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Ponniyin Selvan Character introduction out

‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முத்து, வீரா படங்களுக்கு பிறகு நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீனா நடித்து வருவதால் அவர்களது ரசிகர்கள் இந்த சூப்பர் ஜோடியை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலில் நடந்து முடிந்தது.

இதனையடுத்து தன் டப்பிங் பணியை ரஜினிகாந்த் முடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது மீனா தன்னுடைய டப்பிங் பணியை செய்து முடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை குஷ்பூவும் தன் டப்பிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ரஜினியை திரையில் காண ஆவலாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் குஷ்பூ.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு படத்தை போட்டுக் காட்டியதாம்.

அவர்கள்.. அல்டிமேட் அண்ணாத்த  என படத்தை பாராட்டி ரஜினிக்கும் போன் செய்தார்களாம்.

Latest big update on Super Star Rajinikanth’s Annaatthe is here – check out!

ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினம்.; ‘பார்கவி’ மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் வீ ராஜா

ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினம்.; ‘பார்கவி’ மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் வீ ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்களை வைத்து ‘பார்கவி’ என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் ‘அருவா சண்ட’ படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான வீ. ராஜா.

கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சினிமா கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பும் அதன் தோற்றமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பற்றி இயக்குனரும், தயாரிப்பாளருமான V.ராஜா கூறியதாவது…

ஒரு படத்தை இயக்குவது பெரிய வேலை இல்லை. படத்தை தயாரிப்பது தான் கலைத்துறையில் கடினமான விஷயம் எனவே தயாரிப்பை விட சுலபமானது தான் இந்த இயக்குனர் வேலை.

இயக்குனர் மட்டும் அல்லாமல் பல கலைஞர்களை உருவாக்கி அவர்களுக்கு வசதியான வாழ்வியலை உருவாக்கி கொடுத்த பல தயாரிப்பாளர்கள் நிலமை இன்று கேள்விக்குறியாக உள்ளது.

எனவே எனது படைப்பான ” பார்கவி ” படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதி இயக்குகிறேன்.

‘பார்கவி’ படம் வரலாற்று படமாகும், பிரமாண்டமான படத்தை எனது அனுபவத்தையும் எனக்கு உறுதுணையாக மிக அனுபவம் வாய்ந்த இயக்குனர் பாண்டி செல்வா மற்றும் ராஜி கோபி இருவரையும் இணை இயக்குனர்களாகவும், படத்தின் பலமாக அருவா சண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டியும் உடன் இருக்க குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதுமட்டும் அல்லாது தேசிய விருது பெற்ற எடிட்டர் V J சாபு ஜோசப் இருக்கிறார்.

இந்த படத்தில் அனைத்து டெக்னீசியன்களும் மிகவும் அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெறிந்தவர்கள், எனவே படம் வெற்றி படமாக அமைவது உறுதி.

படத்தின் கதாநாயகன் முகேஷ் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர் இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள்.

விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம் – v ராஜா
கதாநாயகன் – முகேஷ்
கதாநாயகி – ஸ்ரேயா
ஒளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி
இணை இயக்குனர்கள் – பாண்டி செல்வா & ராஜி கோபி
எடிட்டர் – V J சாபு ஜோசப்
நடனம் – ராதிகா
உடைகள் – அமல்ராஜ்
புகைப்படம் – stills விஜய் மணி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ்
இணை தயாரிப்பு – முகேஷ் குமார்
தயாரிப்பு – v ராஜா
தயாரிப்பு நிறுவனம் – ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன்.

Producer V Raja turns director for his new film Bargavi

வெப்சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் நபா நடேஷ்

வெப்சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் நபா நடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வரும் நபா நடேஷ் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறார்.

ஆம்.. அவர்களை போலவே தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ்..

கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில் சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே 275 கோடி.

மேலும் இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். ஆனால் திரைப்படத்தில் அல்ல.

திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்று வரும் வெப்சீரிஸில்.. ஆம்.. பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாக இருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் முதல் வெப்சீரிஸும் இதுதான்.

இந்தியிலும் தனது சாதனை தடத்தை நபா நடேஷ் பதிப்பார் என நம்புவோம்.

Bollywood debut on the cards for the Telugu star actress Nabha Natesh

சொகுசு கார் நுழைவு வரி வழக்கு : விஜய்யை தொடர்ந்து தனுஷ் கார் மீதும் விசாரணை

சொகுசு கார் நுழைவு வரி வழக்கு : விஜய்யை தொடர்ந்து தனுஷ் கார் மீதும் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

After Vijay, Dhanush seeks tax exemption for his luxury car

தயாரிச்ச படமெல்லாம் நஷ்டமாச்சு.; அப்பா சம்பாதித்த சொத்துக்களை அழித்தாரா எஸ்.பி.பி.சரண்.?

தயாரிச்ச படமெல்லாம் நஷ்டமாச்சு.; அப்பா சம்பாதித்த சொத்துக்களை அழித்தாரா எஸ்.பி.பி.சரண்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.பி.பி.சரண்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் எஸ்.பி.பி.சரண் கூறியதாவது…

“சினிமா மீதுள்ள ஆர்வத்தால் படங்கள் தயாரித்தேன்.

நான் தயாரித்த உன்னை சரணடைந்தேன் படத்திற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் படத்திற்கு லாபம் கிடைக்கல.

தெலுங்கில் வெளியான ‘வர்ஷம்’ படத்தை தமிழில் மழை என்ற பெயரில் தயாரித்தேன். அதிலும் நஷ்டம்.

‘சென்னை 28’ படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றாலும் பெரிய லாபமில்லை.

ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அதற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.

ஆனால் பணம் வரவில்லை. நல்ல நல்ல படங்கள் எடுத்தும் எனக்கு லாபமில்லை. இதனால் மன உளைச்சல் தான் வந்தது.

சினிமாவில் நஷ்டம் இயல்பானது என அப்பா ஆறுதல் சொன்னார்..

இதனையறிந்தவர்கள் எஸ்.பி.பாலு சம்பாதித்த பணத்தையெல்லாம் பையன் அழிச்சிட்டான் என்றார்கள். மொத்த சொத்தும் கரைந்தது.

மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக கை கொடுத்தன.

கொரோனாவால் அப்பாவை இழந்துவிட்டோம். வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது.

தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய இசை நிகழ்ச்சியை இனி நான் நடத்தவுள்ளேன். எனது தந்தை குரலில் பாடவும் இருக்கிறேன்.”

இவ்வாறு எஸ்.பி.பி.சரண் அந்த பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.

SPB Charan talks about his losses

More Articles
Follows