தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று (23/01/2021) புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்து நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் தங்களின் தேர்வுகள் ஆன்லைன் முறைப்படி நடத்த வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாணவர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார்.
அதில் ஆன்லைன் மூலம் எடுத்த வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமே தேர்வுகள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் இன்று மாலை புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு அதிகாரி மற்ற அதிகாரிகளுடனும் கலந்து பேசி முடிவு அளிக்கப்படும் என கூறினார்.
Pondicherry students request for online exam