தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் நிவர் புயல் காரைக்கால், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தாக்கியது.
இதனால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு திங்கள்கிழமை நவம்பர் 30ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வர உள்ளது.
இந்த நிலையில் முதல் அமைச்சர் நாராயணசாமி ரூ.100 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிவாரணம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையில் தமிழக அரசும் நிவர் புயல் தொடர்பான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Pondicherry CM Narayana samy writes letter to PM