தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வருகிறார்.
இதற்கான செட் சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் கேட்டபோது, அப்படியொரு சம்பவமே இங்கு நடைபெறவில்லை என்றும் பின்னர் விசாரித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நசரேத் பேட்டை போலீஸார் கூறுகையில்…
“பிக்பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அவரது மரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளது” என்றனர்