தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது 32 ஆவது படத்தின் படப்பூஜை ஜூலை 5ஆம் தேதி சென்னை வானகரம் பகுதியில் உள்ள பி ஜி எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
‘ஜீனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பூஜையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் அர்ஜுனன் ஜூனியர், நாயகிகள் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தேவயானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.
இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த பூஜை விழா காலை 8:30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்னால் இந்த பூஜை தொடங்கப்பட்டது.
பொதுவாக படப்பூஜை என்றாலே நல்ல நேரம் பார்த்து தொடங்குவார்கள் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவரும் 8:30 – 9:00 மணிக்குள் ஆஜராகிவிட்டனர்.
ஆனால் ஜெயம் ரவி கீர்த்தி செட்டி ஆகியோர் கிட்டத்தட்ட 10.30 மணி அளவில் மட்டுமே அந்த தளத்திற்கு வந்தனர். ஆனாலும் விழா தொடங்க 11 மணி ஆனது.
இந்த ‘ஜீனி’ படப்பூஜை மேடையில் பேசிய ஒருவர் கூட தாமதத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பூஜை முடிந்த பின்னர் ரவி புறப்பட்டு செல்லும்போது ரவியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள சிலர் அனுமதி கேட்டனர்.
அதற்கு அவர் “எனக்கு வேலை இருக்கு.. என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ‘இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்..’ என்று கூட கூறி சென்று இருக்கலாம்.. ஆனால் தனக்கு மட்டுமே வேலை இருப்பது போல தோரணையில் கூறிவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சரிதான்.. நீங்கள் பிசியான நடிகர் தான். உங்களுக்கு 1000 வேலைகள் இருக்கும்.
ஆனால் உங்களுக்காக பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடக சமூக வலைத்தளங்கள் இணையதளங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 300+ மேற்பட்டோர் 3 மணி நேரமாக காத்திருந்தார்களே அது உங்களுக்கு தெரியவில்லையா ஜெயம் ரவி.?
ஒரு 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் தாமதம் என்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக இத்தனை பேரை காக்க வைத்தது எந்த விதத்தில் நியாயமாகும்.?
உங்கள் ஒருவருக்காக இத்தனை பேரை நீங்கள் காக்க வைத்தது மட்டும் நியாயமா.? உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறதா? அவர்களுக்கு வேற வேலை இல்லையா.?
இனியாவது உங்கள் நேரத்தை போன்று மற்றவர்கள் நேரத்தையும் கருத்தில் கொண்டு நடந்து கொண்டால் இனி எல்லாம் ஜெயமே..!
Please respect others timing too Jayam Ravi