கிராமத்து அரசியலை பேசும் ‘பாண்டிய வம்சம்’.; பசும்பொன் கோயிலில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கிராமத்து அரசியலை பேசும் ‘பாண்டிய வம்சம்’.; பசும்பொன் கோயிலில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. வி. கதிரவன் Ex MLA வெளியிட்டார்.

‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஏ.சிவபிரகாஷ்.

இதில் நாயகியாக ரக்ஷிதா பானு மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர்.

முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி, சரவணன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில்…

“இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம் என்றார்”.

இப்படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு கண்ணதாசன் செழியன், படத்தொகுப்பு மாதவன்.

Paandiya Vamsam Movie First look released

‘கேஜிஎஃப் 3’ பற்றி மனம் திறந்து பேசிய யாஷ்

‘கேஜிஎஃப் 3’ பற்றி மனம் திறந்து பேசிய யாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“எங்களுக்கு ஒரு யோசனையும் திட்டமும் இருந்தது, ஆனால் நான் வேறு ஏதாவது செய்ய விரும்பினேன்.

எல்லாம் சரியாகிவிட்டால் நாங்கள் அதை பின்னர் செய்வோம், ஆனால் எந்த நேரத்திலும் இல்லை” என்று சொல்லமாட்டோம் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் கூறினார்.

“எனக்குத் தெரியும், நிறைய செய்திகள் உலவுகின்றன.

முடிவாகும் போது அறிவிக்கப்படும். மீதி விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், அது வெளிவரும்போது நான் வந்து சொல்கிறேன். ,” என்று அவர் கூறினார்

3வது முறையாக விஜய் உடன் இணைந்த ‘ரஞ்சிதமே.. பாடகி மானசி

3வது முறையாக விஜய் உடன் இணைந்த ‘ரஞ்சிதமே.. பாடகி மானசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஸ்மிகா, யோகிபாபு, குஷ்பூ, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட வில் உள்ளனர்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதுவரையில் 2.2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

இந்தப் பாடலை நடிகர் விஜய் உடன் பாடகி மானசியுடன் இணைந்து பாடியுள்ளார்.

இதற்கு முன் தலைவா படத்தை இடம்பெற்ற ‘வாங்கன்னா வணக்கம் அண்ணா.. என்ற பாடலில் ‘ஹம்மிங்… மட்டும் செய்திருந்தார் மானசி.

அதன்பின் விஜய்யின் ‘புலி’ படத்தில் சங்கர் மகாதேவனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தார்.

தற்போது 3வது முறையாக விஜய் உடன் இணைந்து டூயட் பாடியுள்ளார் ‘ரஞ்சிதமே..’ MM மானசி.

singer Manasi joined  Vijay for the 3rd time for ‘Ranjithame’

ஆடம்பரமான திருமண பரிசுகளை தனது கணவரிடமிருந்து பெற்ற நடிகை பூர்ணா

ஆடம்பரமான திருமண பரிசுகளை தனது கணவரிடமிருந்து பெற்ற நடிகை பூர்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பூர்ணா , துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஜேபிஎஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஷானித் ஆசிப் அலியை அக்டோபர் 24 அன்று திருமணம் செய்து கொண்டார்.

அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளை வெளியிட்டார்.

இப்போது சமீபத்திய செய்தியில் அவர் தனது திருமண நாளில் தனது கணவரிடமிருந்து பல ஆடம்பரமான விலையுயர்ந்த பரிசுகளை பெற்றுள்ளார்

பூர்ணாவுக்கு கிடைத்த பரிசுகளில் 2700 கிராம் தங்கமும் அடங்கும். இந்த தங்கத்தின் விலை ரூ.1.30 கோடி என கூறப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஷாருக்கானின் ‘கூல்’ பதில்

தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஷாருக்கானின் ‘கூல்’ பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இந்த ஞாயிற்றுக்கிழமை AskSRK என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டர் வழியாக தனது ரசிகர்களுடன் உரையாடினார்.

விஜய்யின் ரசிகர் ஒருவர் பாலிவுட் பாட்ஷாவிடம் தென்னிந்திய நடிகர் விஜய் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்து பாலிவுட் பாட்ஷாவிடம் கேள்வி எழுப்பினார்.

ஷாருக்கான் அந்த ரசிகருக்குப் பதிலளிக்க, “”He is a really cool guy”” என்று எழுதினார்.

ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி & மணிரத்னம் என் இன்ஸ்பிரேசன் – ‘லைகா’ சுபாஸ்கரன்

ரஜினி & மணிரத்னம் என் இன்ஸ்பிரேசன் – ‘லைகா’ சுபாஸ்கரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அந்த விழாவில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் பேசுகையில்,….

‘ இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பை தயாரிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக முதலில் மணிரத்தினத்திற்கு நன்றி. மணிரத்தினம் ஒரு லெஜன்ட். நான் சிறிய வயதில் மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தை பார்த்திருக்கிறேன். இன்று வரை அவர்கள் இருவரும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை நேர்த்தியாக கையாண்டார். இந்தப் படத்திற்காக பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சீயான் விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் லைகா குழுமத்தின் சார்பாக நன்றியை பதிவு செய்து கொள்கிறேன் என்றார்.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கியை போற்றும் வகையில், அவரது பெயரில் செயல்படும் அறக்கட்டைளைக்கு லைகா நிறவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

இதனை லைகா குழும அதிபர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் சென்னையிலுள்ள அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான திருமதி சீதாரவியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subaskaran speech at Ponniyin Selvan success meet

More Articles
Follows