தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் ரஜினிகாந்த் என இந்தியாவே எதிர்பார்த்த நிலையில் தன் உடல்நல குறைவால் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.
இதனால் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
“ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார் நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.
சரி இனியாவது தலைவர் ரஜினியை சீண்ட மாட்டார் சீமான் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
இந்நிலையில் ரஜினியைக் குறித்து சீமான் கூறியுள்ளதாவது :
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவரைத் தற்கொலை முடிவுக்கு தள்ளியிருப்பார்கள்.
4 வருடம் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
NTK leader Seeman controversy speech about Rajinikanth