அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New-Project-2020-06-06T165306.986அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் ரஜினிகாந்த் என இந்தியாவே எதிர்பார்த்த நிலையில் தன் உடல்நல குறைவால் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

இதனால் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

“ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார் நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.

சரி இனியாவது தலைவர் ரஜினியை சீண்ட மாட்டார் சீமான் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினியைக் குறித்து சீமான் கூறியுள்ளதாவது :

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவரைத் தற்கொலை முடிவுக்கு தள்ளியிருப்பார்கள்.

4 வருடம் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

NTK leader Seeman controversy speech about Rajinikanth

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sathishஎதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர். லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சதீஷ்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேலம் நட்ராஜன் உடன் வீடியோ காலில் பேசி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர்கள் அடிக்கடி ட்விட்டரில் பேசிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் பிரபல தனியார் கல்லூரி அழகான ஆண்கள் வசிக்கும் பகுதி எது என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் நடிகர் சதீஷ்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… “இந்த கருத்து கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதற்கு பின்னர் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சென்னை முதலிடத்தைப் பெறவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்” என்று பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் சதீஷ்…, “ரசிக, ரசிகைகள் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நண்பரது அட்மின் செய்தது என்றும், இனி இவ்வளவு வெளிப்படையாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம்” இவ்வாறு நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Sivakarthikeyan and Sathish fun on Loyola polls

JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annattheசிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த அவருடைய 168-வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனா்.

ஒளிப்பதிவை வெற்றி் கவனிக்க இசை பணியை இமான் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் 2020 டிசம்பர் 2ஆம் வாரத்தில் சூட்டிங் தொடங்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள நடிகா் ரஜினிகாந்த், தனி விமான மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் ஹைதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

2021 ஜனவரி மாதத்துக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அண்ணாத்த சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா என உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினியும் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

எனவே ‘அண்ணாத்த’ படம் டிராப் என வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து ட்வீட் போட்டுள்ளனர்.

அதில் 2021 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் ரிலீஸ் (வியாழன்) என அறிவித்துள்ளனர்.

Annaatthe release date announced

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanமதுரை ஒத்தக்கடை பகுதியில் தன் கட்சி சார்பான தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் சீமான்.

அப்போது அவர் பேசியதாவது…

நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி.

உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும். நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும்.

நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது.

வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன்” எனப் பேசினார் சீமான்.

சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் கிரீஸ் டப்பாவை கவுண்டமணி மீது எட்டி உதைப்பார் செந்தில் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சீமானின் இந்த காமெடியைப் மையப்படுத்தி நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது.

Netizen criticise seemans today speech

விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR Movieஇந்தியா முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா…

“RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.

தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Director SS Rajamouli’s RRR set to release on October 13

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tanya Hope பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி.

இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் பைட் கொரியாகிராபராக பங்கேற்கிறார்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

நடிகர்கள்

நாயகன் – விமல்

நாயகி – தன்யாஹோப்

மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

தொழில்நுட்பகலைஞர்கள்

தயாரிப்பு: MIK Productions (P) Ltd
P. இளையராஜா

இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி

ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்

எடிட்டர் : கோபி கிருஷ்ணா

ஸ்டண்ட்: கனல் கண்ணன்

ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார்

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா

புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம்

மக்கள் தொடர்பு : P. தியாகராஜன்

Vemal and Tanya hope joins for new film

More Articles
Follows