தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.
விரைவில் தன் அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிவிக்க உள்ளார்.
இதனிடையில் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இதில் மன்ற விதிகளை மீறியதாக சிலரை ரஜினிகாந்த் நீக்கினார்.
அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதற்காக காரணத்தை ஒரு நீண்ட அறிக்கையாக சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.
தற்போது நீக்கப்பட்டவர்களில் சிலர் நேரடியாகவும், கடிதம் மூலமும் ரஜினியிடம் மன்னிப்பு கோரியுள்ளர்.
இதனையடுத்து, அவர்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது…
நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்த சில உண்மைகளை சொல்லியிருந்தேன்.
அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் சென்றாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.”
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No power can split me and my fans says Rajinikanth