Breaking 7AM SHOW கூட தேவையில்ல.. சொன்னது யார் தெரியும்ல.?.; பாவம்ய்யா விஜய் ரசிகர்கள்

Breaking 7AM SHOW கூட தேவையில்ல.. சொன்னது யார் தெரியும்ல.?.; பாவம்ய்யா விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் அதிகாலை காட்சிகள் வேண்டுமென ரசிகர்களும் தயாரிப்பு நிறுவனமும் அடம்பிடிக்கின்றது.

ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4am / 5am மணி காட்சிக்கு புதுச்சேரியில் 7am மணி காட்சிக்கு ‘லியோ’ படத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது,

இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் 4 மணி காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததோடு 7 மணி காட்சி வேண்டுமானால் தமிழக அரசிடம் பேசி பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தார்.

அத்தோடு இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மாலை 4 மணிக்குள் தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அரசு வழங்கி உள்ள ஐந்து காட்சிகள் போதுமானது என தெரிவித்துள்ளன.

மேலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு ஒரு மணிக்குள் ஐந்து காட்சிகள் திரையிட போதுமான நேரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாலை காட்சிகள், 7மணி காட்சிகள் தேவையற்றது. இதனால் திரையரங்கின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த பதில் நிச்சயமாக விஜய் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்யும். அதிகாலையில் தளபதி விஜய்யை காண வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

என்ன மூன்று மணி நேரம் தாமதமாக விஜய் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என நம்பலாம்.

No need of 7am shows for Leo Theatre owners reaction

JUST IN ‘லியோ’ 7AM காட்சிக்கு அனுமதி.? எல்லா காட்சியும் ரசிகர்களுக்காக தானே.? கோர்ட்டில் சுவாரஸ்ய விவாதம்

JUST IN ‘லியோ’ 7AM காட்சிக்கு அனுமதி.? எல்லா காட்சியும் ரசிகர்களுக்காக தானே.? கோர்ட்டில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19 தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.

அன்று காலை 9 மணிக்கு தான் தமிழகத்தில் காட்சிகள் தொடங்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 காட்சிகளை மட்டும் திரையிட்டு கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

எனவே தமிழகத்திலும் காலை 4 மணி 7 மணி காட்சிக்கு ரசிகர்களுக்காக அனுமதி அளிக்க வேண்டும் என லியோ பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் இந்த வழக்கு விசாரணை இன்று அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்றது.

“ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் எல்லா காட்சிகளும் ரசிகர்களுக்காக தானே திரையிடப்படுகின்றன என நீதிபதி அனிதா எதிர் கேள்வி கேட்டார்.

மேலும் அதிகாலை சிறப்பு காட்சிகளால் ஒரு ரசிகர் மரணம் அடைந்தார். மேலும் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. லியோ ட்ரெய்லர் வெளியான சமயத்தில் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது எனவும் அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது.

அதே சமயம் காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு படத்தை திரையிடுவது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்திற்குள் (அக்டோபர் 18) உத்தரவு பிறக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

Leo Fdfs Starts 7am TN Govt can decide says Court

சீயான் விக்ரம் படத்தை இயக்கும் சித்தார்த்தின் ஹிட் பட இயக்குனர்

சீயான் விக்ரம் படத்தை இயக்கும் சித்தார்த்தின் ஹிட் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘தங்கலான்’.

ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் நவம்பர் மாதம் 24ல் வெளியாக உள்ளது. விக்ரம் நடித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

சித்தார்த் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான ‘சித்தா’ என்ற படத்தை இயக்கியவர் அருண்குமார்.

இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது அருண்குமார் இயக்கத்தில் தான் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..

விக்ரம் மற்றும் சித்தா இயக்குனர் அருண்குமார் இணையும் இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்…

விஜய்சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ & ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chithha director Arunkumar will direct Vikram

விஷாலுடன் இணைந்த இயக்குனர்கள் கௌதமேனன் & சமுத்திரக்கனி

விஷாலுடன் இணைந்த இயக்குனர்கள் கௌதமேனன் & சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்சனுக்கும் வேகத்திற்கும் பஞ்சமில்லாத படம் என்றால் இயக்குனர் ஹரி இயக்கிய படங்களை சொல்லலாம்.

தற்போது தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து பணியாற்றிய வருகிறார் இயக்குனர் ஹரி.

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை விஷால் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஹரியின் ஆஸ்தான பகுதிகளான காரைக்குடி & தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது.

Gautam Menon and Samuthirakani join hands with Vishal

துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

துரோகி சிவகார்த்திகேயன்..; இந்த ஜென்மத்தில் இணைய மாட்டேன் – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இவரது படங்களில் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தால் அனிருத் இசை இருக்கும்.. அதுவே சிவகார்த்திகேயன் கிராமத்து நாயகனாக நடித்திருந்தால் அந்த படத்தில் இமான் இசை நிச்சயமாக இருக்கும்.

இப்படி ரசிகர்களை மகிழ்வித்த சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணி சமீப காலமாக முறிந்து விட்டது. இது யதார்த்தமான ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி மனம் திறந்து சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார் இமான்.

அவரது பேட்டியில்.. இனி நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து பணிபுரிய போவதில்லை.. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அது என்னுடைய பர்சனல் விஷயம். எனவே வெளியே சொல்ல முடியாது.

ஆனால் இனி இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணிபுரிய மாட்டேன். ஒருவேளை மறு ஜென்மம் இருந்து நாங்கள் இதே துறையில் இருந்தால் பணிபுரிய வாய்ப்பு இருக்கலாம்.” என்றார் இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக அமைந்தன. சிவகார்த்திகேயன் நடித்த இந்த படங்களுக்கு இசையமைத்தவர் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Reason Behind Sivakarthikeyan and Imman clash

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீராம்.. விஜய்க்கு குரல் கொடுக்காத சித்தார்த்.. 4 கோடி பட்ஜெட் விஷால் பேச்சு.; அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் அருகே ‘தீ லா கஃபே’ என்ற உணவகத்தை நடிகர் அமீர் தொடங்கி உள்ளார். இந்த விழாவிற்கு வந்து ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்நிகழ்வில் அவருடன் கரு பழனியப்பன், நடிகர் சாய் தீனா, சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

விஜய்சேதுபதி

அதில்…

“விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனை வருதே. அதற்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா? .. இலங்கை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்தார்களே அப்போது சித்தார்த் குரல் கொடுத்தாரா?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜெய்ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் எழுப்பியது பற்றி கேட்டபோது.. கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் சாதாரண ஏழை மக்கள் அல்ல. ஒவ்வொரு வகையில் வசதியான மேல் தட்டு மக்களே..

அப்படி இருந்தும் அவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை கண்டு என்ன சொல்வது? இது ஒரு அரசாங்க நடத்தும் போட்டி அல்ல. தனியார் நடத்துப் போட்டி தான்.

விஜய்சேதுபதி

இந்தியா கிரிக்கெட் வாரியம்.. பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் என தனியார் இந்த போட்டிகளை நடத்துகின்றன. ஆனாலும் அரசு தலையிட வேண்டும் என்றார்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அமீர் பதிலளிக்கையில்…

கடலில் நிறைய மீன்கள் உள்ளன.. அவையெல்லாம் ரிலையன்ஸ் என்ற தனியார் மார்க்கெட்டுக்கு மட்டும் வருவதில்லை.. ரோட்டு கடைகளிலும் மீன் விற்கப்படுகிறது.. அது போல குறைந்த பட்ஜெட்டில் சின்ன படங்கள் தயாரிக்கும் போது அவை தியேட்டரை மட்டும் நம்பி இருக்க கூடாது. தற்போது ஓடிடி சந்தை விரிவடைந்துள்ளது.. அவற்றையும் சின்ன படங்கள் குறி வைக்க வேண்டும்.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் வேண்டாம் என விஷால் கூறி இருந்தது ஆவேசத்தில் கூறினாரா அல்லது அக்கறையுடன் கூறினாரா தெரியவில்லை. ஆனால் அவர் அக்கறையிடம் கூறியிருப்பார் என்று தெரிகிறது என்றார் அமீர்.

அமீர்

Ameer speech at his new restaurant opening ceremony

More Articles
Follows