JUST IN நம்பர் ஒன் ஹீரோ விஜய்..; விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

JUST IN நம்பர் ஒன் ஹீரோ விஜய்..; விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்ட குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசியல் குறித்தும் சினிமா குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்…

“தமிழக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி விட்டதாக தெரிவித்துள்ளது. அதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது.

“விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டேன். அரசியல் வருவேன் என எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்ன பிறகு அவரின் அரசியல் வருகை குறித்து நான் கருத்து தெரிவிப்பேன்.

இப்போது நம்பர் ஒன் ஹீரோவாக விஜய் உள்ளார். அவரது ‘லியோ’ படத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார் விஜய பிரபாகரன்.

No 1 hero Vijay says Vijayakanth son Vijaya Prabakar

போதைக்கு ஆதரவளித்து ரவுடியிசத்தை உருவாக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க மனு

போதைக்கு ஆதரவளித்து ரவுடியிசத்தை உருவாக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

தமிழக அரசும், காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வருகிறது.

ஆனால், ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

complaint to take action against Vijay who supports drugs and rowdyism

துல்கர் சல்மானின் தெலுங்கு பட டீசரை வெளியிடும் மகேஷ் பாபு

துல்கர் சல்மானின் தெலுங்கு பட டீசரை வெளியிடும் மகேஷ் பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கிங் ஆஃப் கோதா’ படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

சமீபத்தில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கிங் ஆஃப் கோதா

Mahesh Babu releases Telugu teaser of Dulquer Salmaan’s ‘King of Kotha’ film

இது ரீ ரிலீஸ் சீசன்.; ரஜினி -:கமலை அடுத்து ஹிட் படத்தை இறக்கும் விக்ரம்

இது ரீ ரிலீஸ் சீசன்.; ரஜினி -:கமலை அடுத்து ஹிட் படத்தை இறக்கும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் ஆன படங்களை பல வருடங்கள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யும் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

எம்ஜிஆரின் ‘உலகம் சுற்று வாலிபன்’ மற்றும் சிவாஜியின் ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்கள் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ- ரிலீஸ் செய்யப்பட்டன.

அதுபோல தன் தோல்வி படமான ‘பாபா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்து அதில் ரஜினிகாந்த் வெற்றி கண்டார்.

நேற்று ஜூன் 23ல் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தை ரீரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளனர்்

இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான ‘அந்நியன்’ படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஒரே விக்ரம் 3 விதமான தோற்றத்தில் நடித்து ரசிகர்கள் அசத்தி இருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மற்றும் ரஜினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நியன்

Shankar Vikram’s Anniyan rerelease update

ஒரே ஒரு ஹிட்டு.; கமல் படத்தை முடித்துவிட்டு ஹிட் இயக்குநருடன் இணையும் சிம்பு

ஒரே ஒரு ஹிட்டு.; கமல் படத்தை முடித்துவிட்டு ஹிட் இயக்குநருடன் இணையும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை முடித்துவிட்டு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

இதனிடையில் ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார்.

இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது சிம்பு நடிப்பில் உருவாக 48வது படமாகும்.

இதில் நாயகியாக சாய் பல்லவி நடிப்பார் எனக் கூறப்படுகிறது்

இந்த நிலையில் சிம்புவின் 49 படத்தின் பற்றிய தகவல் வந்துள்ளது.

அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் சிம்பு இணைவார் என தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில் சிம்புவை சந்தித்து இயக்குனர் ஒன் லைன் சொன்னதாகவும் அதற்கு சிம்பு ஓகே சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.

விக்னேஷ் ராஜா

STR49 will be directed by Por Thozhil director Vignesh Raja

வரி ஏய்ப்பு : யூடியூபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கும் பிரபலங்கள்

வரி ஏய்ப்பு : யூடியூபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொகுப்பாளர், நடிகை, யூ டியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே.

ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் நடிகை வலம் வந்தார்.

இவர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பேர்லே மானே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘வலிமை’ திரைப்படத்தில் கிறிஸ்டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறியப்பட்டார்.

‘நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி’, ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘டபிள் பேரல்’, ‘பிரீத்தம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது , கேரளாவில் உள்ள பிரபல யூ டியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக நடிகை பேர்லே மானே வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

மாலைவரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கேரளாவில் உள்ள யூ டியூபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.

income tax department searches in YouTubers house

More Articles
Follows