2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nethra audio launch happening today in Canadaதமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ. வெங்கடேஷ்.

இதுவரை 22 படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.

மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.

ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்க்கு நிரந்தரமாக ஒரு இடம் உண்டு.

இந்தப் படமும் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாக காதலும் சேர்ந்து கொள்ள.

இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக “நேத்ரா” இசை வெளியீட்டு விழா வரும் இன்று டிசம்பர் 2ஆம் தேதி கனடாவில் நடைபெறுகிறது.

அண்மையில் ரஜினியின் 2.0 இசை வெளியீடு துபாய் நாட்டில் நடைபெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nethra audio launch happening today in Canada

nethra venkatesh

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ehumin Movie Shoot Starts with Poojaவையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.

‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.

இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek and Devayani teams up for Ehumin movie

 

 

 

 

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbu chezhiyan and H Rajaசசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர் அன்புசெழியன்தான் என கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டார்.

இதனால் ஒரு சிலர் அசோக்குமாருக்கு ஆதரவாகவும் மற்ற சிலர் அன்பு செழியன் நல்லவர் எனவும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக.வை சேர்ந்த எச். ராஜா தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

H Raja‏Verified account @HRajaBJP 4m4 minutes ago
பொதுவாக கொலை மற்றும் தற்கொலை வழக்கில் இறந்தவரின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும். எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமார் கடிதம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.நிழல் உலக தாதா அன்புச் செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஇந்த டிசம்பர் மாதம் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் விஷால் தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.

அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இதுபோன்ற செய்திகள் வருகின்றன.

தமன்னாவை காக்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு

தமன்னாவை காக்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Tamannahமைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது சிம்பு பல பிரச்சினைகளை கொடுத்து வந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சொன்ன நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார் சிம்பு. இவரை நம்பி தமன்னா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். அவருடன் மேக்அப் மேன் உள்ளிட்ட உதவியாளர் 5,6 பேர் வருவார்கள்.

ஒருமுறை 2 நாட்கள் காத்திருந்து சென்றுவிட்டார் சிம்பு.

பின்பு மீண்டும் தமன்னாவிடம் கெஞ்சி, மற்றொரு நாள் கால்ஷீட் வாங்கினேன். அப்போதும் சிம்பு வரவில்லை. எனவே தமன்னா காத்து கிடந்தார்.

இதனால் எனக்கு ரூ. 6 லட்சங்கள் வரை வீணானது.” என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer michael rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

எனவே தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு சிம்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மைக்கேல்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்…

சிம்பு வைத்து படம் எடுத்த பிறகுதான் அவரை முழுமையாக தெரிந்துக் கொண்டேன்.

சொன்ன நேரத்திற்கு படத்திற்கு வரமாட்டார். என் மகள் திருமணம் முடிந்த மறுநாள் விருந்து வைத்திருந்தேன். அப்போது மாப்பிள்ளையை கூட கவனிக்காமல் சிம்பு வீட்டிலேயே இருந்தேன்.

சூட்டிங் அழைத்தாலும் அவர் வருவதில்லை. பிறகு பார்க்கலாம் என்பார்.

அவர் படம் என்றால் பைனான்சியர் கூட பணம் தரமறுக்கிறார்.

நான் திருந்திவிட்டேன். என்னை நம்பி என்னிடம் வேலை பார்க்கும் சில குடும்பங்கள் உள்ளது.

அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. என்னை வைத்து படம் எடுங்கள். நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார்.

ஆனால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். என தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்றால் பல மணிநேரம் காக்க வைக்கிறார். அவரால் எனக்கு ரூ 18 கோடி நஷ்டம். கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், அவர் திருந்துவதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

More Articles
Follows