இலக்கியா-வில் இணைந்த நந்தன் ஹீமாபிந்து மீனா சதீஷ் டெல்லிகணேஷ்

இலக்கியா-வில் இணைந்த நந்தன் ஹீமாபிந்து மீனா சதீஷ் டெல்லிகணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் TV- யில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற சந்திரலேகா தொடர் 9ந் தேதியுடன் முடிவடை கிறது.

அடுத்து அக்டோபர் 10ந்தேதி முதல் திங்கள் To வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகாத்தொடர் ஒளிபரப்பாகிறது.

இந்த மெகாத் தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் பிரபலமான தொடர்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல கலைஞர்கள் இந்தத் தொடரிலும் பணியாற்றுகிறார்கள்.

தந்தை கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள்.

சிறு வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொள்கிறாள், தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள்.

இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள்.

நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.

இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப்பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள்.

அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது.

ரூபஸ்ரீ , நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சரிகம இண்டியா லிமிட்.,சார்பாக B.R. விஜயலட்சுமி தயாரிக்க

கதை : சரிகம கதை இலாகா

திரைக்கதை : கலைமாமணி சேக்கிழார்

வசனம் : குரு சம்பத்குமார்

இயக்கம் : சாய் மருது

கிரியேட்டிவ் ஹெட் : பிரின்ஸ் இமானுவேல்.

இலக்கியா

Nandhan and Hima Bindhu starrer ilakkiya

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பட சூப்பர் அப்டேட்ஸ்

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பட சூப்பர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்1’ ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இதனையடுத்து விக்ரம் நடிக்க உள்ள படத்தை ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகிக்கு முக்கியமான வேடம். கதையை தாங்கி நிற்கும் கேரக்டரில் அவரும் ஒருவர் என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி அல்லது ராஷ்மிகா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்காலிகமாக சீயான் 61 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் போடப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்ற பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் விக்ரமின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தன்னுடைய கேரக்டருக்கு அவர் முற்றிலும் தன்னை பொறுத்துக் கொள்வார் என தான் நம்புவதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு குறிப்பிட்ட இன மக்களை சார்ந்த ஒரு புரட்சி படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Vikram and Ranjith combo Chiyaan 61 updates

POWDER மேடையை POWERful மேடையாக்கிய திரைப் பிரபலங்கள்.; பரவசத்தில் விஜய்ஸ்ரீ & நிகில் முருகன்

POWDER மேடையை POWERful மேடையாக்கிய திரைப் பிரபலங்கள்.; பரவசத்தில் விஜய்ஸ்ரீ & நிகில் முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”.

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்

இயக்குநர் – திரைக்கதை எழுத்தாளர் – நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில்…

“இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார்.

நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வசந்த் பேசுகையில்…

, “நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.”

இயக்குநர் எழில் பேசுகையில்..

“எனக்கு நிகிலை அவர் பிஆர்ஓ ஆவதற்கு முன்பே தெரியும். எங்கள் நட்பு 23 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆடியோ மற்றும் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளின் போது ஒரு பிஆர்ஓ-வாகவும், இப்போது பெரிய திரைகளில் நடிகராகவும் தனது வீரியத்தை காட்ட இருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்.”

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில்…

“நிகில் ஒரு இயல்பான நடிகர் என்பது இந்தப் படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. நிகில் தனது தொழிலில் அயராத அர்ப்பணிப்பை கொடுத்து, சரியான நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஒரு வெற்றிகரமான நடிகராக அவர் பல மைல்கள் பயணிக்க உள்ளார், அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”

இயக்குனர் சசி பேசுகையில்..

“நிகில் எப்போதும் உற்சாகம் தரும் நபர், இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “சசி சார் சொன்னது போல் நிகில் சார் ஒரு உற்சாகமிக்க நபர். அவர் எப்பொழுதும் கடின உழைப்பு கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவர் நடிகராகி, வெற்றியைக் காணப்போகிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் என்பதும், இந்த படத்தில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பணியை செய்திருப்பதும் டிரெய்லரில் தெரிகிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.”

எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில், “நேர்த்தியான காட்சிகளும், மேக்கிங் ஸ்டைலும் டிரெய்லரில் நமக்கு தெரிகிறது, எல்லாமே மிகச் சரியாகவும், தொழில் ரீதியாகவும் அமைந்துள்ளது. விஜய் ஸ்ரீ நிச்சயம் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநராக வருவார். இசை அமைப்பாளரின் இசையில் ஒலியின் தரம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாகவும், பழக்கமான முகங்களாகவும் இருக்கிறார்கள், படக்குழுவின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும். நிகில் முருகன் இந்தப் படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக நல்ல பெயரைப் பெறுவார். அவர் நடிப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஒட்டுமொத்த அணியும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சமீர்.. “எனக்கு நிகில் சாரை பத்தாண்டுகளுக்கு மேல் தெரியும். கமல் சார் மூலம்தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் தொடர்ந்து ஆடைகளை மாற்றுவதில் பெயர் பெற்றவர், ஆனால் நட்பை அவர் மாற்றுவதில்லை. இந்தப் படம் வெற்றிபெற அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உத்வேகமும், ஒருங்கிணைப்பும் கொண்ட கடின உழைப்பாளி. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”.

தயாரிப்பாளரும் இயக்குநருமான CV குமார் பேசுகையில், “நிகில் முருகன் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் எனது படங்களுக்கு பிஆர்ஓவாக இருந்துள்ளார். அவரது அதிக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவரை எனக்கு பிடிக்கும். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

அஜயன் பாலா பேசுகையில், “அனைத்து படங்களுக்கும் சுறுசுறுப்புடன் கூடிய உழைப்பை கொடுக்கும் கடின உழைப்பாளி தான் நிகில். பல படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர். அவரது நேர்மையும் கடின உழைப்பும் அவருக்கு இன்று தமிழ் சினிமாவில் நடிகர் என்ற இந்த அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது. ‘பவுடர்’ என்ற தலைப்புக்கு நிறைய முக்கியத்துவமும், மதிப்பும் உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “நிகில் முருகன் நடிகராக வளர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குநர் விஜய்யை பாராடியாக வேண்டும். இசையமைப்பாளரின் பணி பாராட்டத்தக்கது, இது அவரது முதல் படம் போல் இல்லை. முதல் படத்திலேயே நிகில் போலீஸ் சீருடை அணிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி பேசுகையில்,
“நான் முதல்முறையாக சந்தித்ததில் இருந்தே நிகில் சார் ஒரு சிறந்த நலம் விரும்பியாக இருந்து வருகிறார். விஜய் ஸ்ரீ ஜி உடனான எனது பயணம் தாதா 87ல் இருந்து, இன்னும் பல படங்களில் தொடரும். இந்தப் படத்தின் இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறப்பான பணியினை செய்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”
என்றார்.

நடிகர் ரோபோ ஷங்கர் பேசுகையில், “நிகில் முருகனுக்கு அபாரமான கமாண்டிங் பவர் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட 16 வயதினிலே திரைப்படத்தின் டிஜிட்டல் ரீ-ரிலீஸ் உட்பட பல நிகழ்வுகளில் நான் அதைப் பார்த்திருக்கிறேன். நிகில் அவர்கள் மொத்த கூட்டத்தையும் இயக்குவதை நான் பார்த்தேன். எனவே நடிகராகவும் சிறப்பாக பணியாற்றியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜா பேசுகையில்..
இப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நிகில் சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

நடிகர் வையாபுரி பேசுகையில், “இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு ரீ-என்ட்ரி போன்றது, இந்த வாய்ப்பை வழங்கிய நிகிலுக்கு நன்றி. அவர் எனக்கு காட்பாதர் போன்றவர், இந்த வாய்ப்பால் எனக்கு தற்போது அதிக வாய்ப்புகள் கிடைத்து தற்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். நான் 400 படங்களில் நடித்திருக்கிறேன், பவர் போன்ற எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை.”

நடிகர் பார்த்திபன் அனுப்பிய குரல் குறிப்பில், “பிஆர்ஓவாக ஷோஸ்டாப்பராக இருந்த நிகில் முருகன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர். இந்தப் படத்தின் மூலம் நடிகராக அனைவரின் மனதையும் வெல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். திரையுலகில் உள்ள அனைத்து துறைகளையும் பற்றி அவருக்கு நல்ல அறிவு இருக்கிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த டீமையும் வாழ்த்துகிறேன்.”

நடிகர் ஆதவன் பேசுகையில், “நான் பல முன்னணி நடிகர்களுக்கு மிமிக்ரி செய்துள்ளேன், ஆனால் எனது மிமிக்ரிக்கு பிறகு ஒருவர் நடிகராக வருவது இதுவே முதல் முறை. அவரது கடின உழைப்பு இன்று அவருக்கு தொழில்துறையில் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுத்தந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை அனித்ரா நாயர் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த நிகில் சார், தயாரிப்பாளர்கள், விஜய் ஸ்ரீ ஜி சாருக்கு நன்றி. நல்ல கதை கொண்ட திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

தயாரிப்பாளர் மோகன்ராஜ் பேசுகையில், “நல்ல நகைச்சுவை கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படம். இதன் முதல் பிரதியை பார்த்தேன், ஒவ்வொரு ஷாட்டும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி பேசுகையில், “படம் முழுவதும் தயாரிப்பாளர் மோகன் சார் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். நிகில் சார் மிகச்சிறப்பான பணி செய்திருக்கிறார். ஒரு இரவு பின்னணியில் கதை என்பதால் முழு திரைப்படமும் இரவில் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய வகையில் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, கொரோனா காலத்தில் இரவு ஊரடங்கு இருந்ததால் படப்பிடிப்பு கெட்டுப்போனது. பலத்த சவால்களுக்கு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படக்குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

கூல் சுரேஷ் பேசுகையில், “இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தியேட்டர்கள் கைதட்டல், விசில், பாராட்டுகள் என நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். நிகில் ஒரு அதீத ஆற்றல் மிக்க நபர், அவருடைய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இந்தப் படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தப் போகிறது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் நிகில் முருகன் பேசுகையில், “எனக்கு வழிகாட்டிய முன்னோடிகள், எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. என் தாய், தந்தை, மனைவிக்கு நன்றி. இதுவரை நான் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் நடிகராக வருவது இதுவே முதல் முறை. சிறப்பான கதை உள்ளடக்கம் கொண்ட ஒரு நல்ல திரைப்படத்துடன் நாங்கள் வந்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுடன் கூடிய விரைவில் உங்களை பெரிய திரையில் சந்திப்போம் நன்றி.”

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் தொழில் நுட்ப குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை – லியாண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – ராஜபாண்டி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ

பவுடர்

Powder Audio and Trailer Launch highlights

‘அசுரன்’ நாயகி மஞ்சு வாரியாருடன் இணைந்த பிரபுதேவா

‘அசுரன்’ நாயகி மஞ்சு வாரியாருடன் இணைந்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ எனும் படத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.

இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம்பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆயிஷா

Prabhu Deva manju warrier joining Ayisha movie

விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.

அக்டோபர் 7 திரைக்கு வரவிருக்கும் தனது ஹிந்தி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் அவர் தற்போது பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில், ராஷ்மிகா பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்த்து அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த கிசுகிசுக்கு நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

நமக்கென்று ஒரு கதை இருந்தால் அதை செய்ய வேண்டும். வேடிக்கையாக இருக்கும். நாங்கள் நல்ல நடிகர்கள், இயக்குனர்களை ஏமாற்ற மாட்டோம்,” என்று கூறினார்.

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.

70 ஆண்டுகளுக்கு முன் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் என்றும் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.

லைக்கா தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்திருந்தனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

நேற்று படம் வெளியானது முதலே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

அதன் படி ரூபாய் 80 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று கூறலாம். இனி வரும் நாட்களில் மேலும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களில் இதன் வசூல் எகிறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்திற்கு PS1 ப்ரீ-புக்கிங்கில் செயலிகளே கிராஷ் ஆகும் அளவிற்கு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ponniyan Selvan collections in 100 crore

More Articles
Follows