நாக சைதன்யாவை தொடர்ந்து மற்றொரு மகனுடன் இணையும் நாகார்ஜுனா

நாக சைதன்யாவை தொடர்ந்து மற்றொரு மகனுடன் இணையும் நாகார்ஜுனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா.

இவர் ஓரிரு நேரடி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ‘தோழா’ என்ற படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவர் தற்போது நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கோஸ்ட்’. நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அவரது மகன்களும் பிரபல நடிகர்களுமான நாக சைதன்யா & அகில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது நாகார்ஜுனா பேசியதாவது…

பங்கர்ராஜு படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தேன். விரைவில் என் 100வது படத்தில் அகிலுடன் இணைந்து நடிக்க உள்ளேன்” எனப் பேசினார்.

nagarjuna akhil

BREAKING காதல் காமம் ஆரோக்கியம் அரசியல் ரஜினி கமல் விஜய்.; சரவெடியாய் அமைந்த சரத்குமார் சந்திப்பு

BREAKING காதல் காமம் ஆரோக்கியம் அரசியல் ரஜினி கமல் விஜய்.; சரவெடியாய் அமைந்த சரத்குமார் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார்.

ஹீரோ வில்லன் குணச்சித்திர கேரக்டர் என எந்த வேடம் எடுத்தாலும் தன் முத்திரை பதித்து வருபவர்.

தற்போது சமத்துவ மக்கள் கட்சியை அரசியல் கட்சியை நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் ரிலீசை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

* பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

எந்த கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக அமைத்துக் கொடுப்பவர் மணிரத்னம். எனவே ரஜினி நடித்திருந்தாலும் அவர் தான் கேரக்டரில் ஜொலித்திருப்பார்.

*கமலுக்கும் எனக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும்.

ஆனால் அதே நினைத்து கொண்டிருந்தால் பிரச்சனை பெரிதாகும். சமீபத்தில் விக்ரம் படம் பார்க்க அழைத்திருந்தார். அதுபோல விக்ரம் சக்சஸ் பார்ட்டிக்கும் அழைத்திருந்தார். அவரை சந்தித்தேன்.

* வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தது நல்ல அனுபவம். அருகில் இருந்து அவரது நடிப்பை பார்த்தேன்.

* உடலை கட்டுவதற்காக வைத்திருப்பது எப்போதும் நல்லது. தினமும் உடற்பயிசி செய்ய வேண்டும்.

என் தந்தை புகை மது ஆகியவற்றை பழக வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எனவே எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது.

*பாஜக காங்கிரஸ் கட்சியிலும் இருந்து கூட்னணிக்கு எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனது கட்சி பணியிலும் நான் செயல்பட்டு தான் வருகிறேன். இப்போது ஆன்லைன் மூலமாக ஆலோசனைகள் செய்து வருகிறேன்.

* பொன்னியின் செல்வன் படத்தில் காதல் கம்பீரம் எல்லாம் இருக்கும். எனக்கு பிடித்த நடிகைகள் சரோஜாதேவி பத்மினி சாவித்திரி.

*பொன்னியின் செல்வன் படத்தில் எந்த நடிகை பிடிக்கும் என கேட்டு மாட்டி விடாதீர்கள். எனக்கு பிடித்தவர் ராதிகா தான்.

*என் கைவசம் இப்போது இருபதுக்கு மேற்பட்ட படங்களை உள்ளன. இது என்னுடைய ரீ என்ன்ட்ரீ அல்ல. முதல் என்ட்ரீயே முடியவில்லை. அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரத்தில் நடித்தது உண்மைதான். அது தடை செய்யப்படவில்லை. தடை செய்திருந்தால் நான் நிச்சயம் அதை செய்திருக்க மாட்டேன்.

அதுபோல டாஸ்மாக் தடை செய்தால் நல்லது தான்.*” என பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் சரத்குமார்.

Sarthkumar recent press meet high lights

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் சென்னை கே4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார்.

படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.

அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ்.

கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா.

Arnav Divya

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மகேஷ்பாபு.

இவர் நடித்த பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களை தான் தமிழில் விஜய் ரீமிக்ஸ் செய்து நடித்து வந்தார்

இவரை தெலுங்கு திரை உலகின் பிரின்ஸ் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவிக்கும் பிறந்தவர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் வயது முதிர்வு மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி மகேஷ்பாபு ரசிகர்களையும் தெலுங்கு திரையுங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை ஆஷா பரேக் பெறுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…

“இந்திய சினிமாவிற்கு திருமதி ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்றார்.

2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதை அறிவித்த அமைச்சர், குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த விழாவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

ஆஷா பரேக்

ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1992-ல் ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

1998- முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

ஐந்து உறுப்பினர் நடுவர் குழு திருமதி ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டதாக அனுராக் தாக்கூர் கூறினார்.

நடுவர் குழு விவரம் 1) திருமதி ஆஷா போஸ்லே 2) திருமதி ஹேமமாலினி, 3) திருமதி பூனம் தில்லான், 4) திரு டி எஸ் நாகாபரணா, 5) திரு உதித் நாராயண்.

கூடுதல் தகவல்கள்…

இந்த விருது இதற்கு முன்பு ராஜ் கபூர், யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென்,தேவிகா ராணி , அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு இந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

1960 முதல் 1980 கள் வரை கதாநாயகியாக நடித்த ஆஷா பரேக் பிரபல நடிகர் பரேக்கின் மகள் ஆவார்.

1960களில் முன்னணி நடிகர்களான ராஜ்கபூர், ஷம்மி கபூர், தேவ் ஆனந்த், தர்மேந்திரா என பலருடன் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 10 வயதாக இருந்தபோது மா (1952) படத்தில் நடித்தார்.

ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), ஃபிர் வோஹி தில் லயா ஹூன் (1963), தீஸ்ரி மன்சில் (1966) , பஹரோன் கே சப்னே (1967), பியார் கா மௌசம் (1969), மற்றும் கேரவன் (1971) இவரது புகழ்பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

சென்சார் போர்டின் தலைவராக பதவி வகித்துள்ளார். சென்சார் போர்ட் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.

சொந்தமாக நடனப்பள்ளியும், தனது பெயரில் ஒரு மருத்துவமனையையும் மும்பையில் நடத்தி வருகிறார் இவர்.

ஆஷா பரேக்

Actress Asha Parekh to be bestowed with Dadasaheb Phalke Award

More Articles
Follows