தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபலமான நடிகர்களின் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை போல் தங்கள் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின்.
சித்திரம் பேசுதடி… அஞ்சாதே.. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. நந்தலாலா முதல் துப்பறிவாளன், சைக்கோ வரை அனைத்து படங்களையும் வித்தியாசமாக இயக்கியிருந்தார்.
இவரது படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையே உயிரூட்டியது.
இவை அனைத்தும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.
துப்பறிவாளன் 2 இயக்கி கொண்டிருந்தபோது அப்பட நாயகன் விஷாலிடம் ஏற்பட்ட பிரச்சினையால் அது இருந்து விலகி தற்போது பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம் மிஷ்கின்.
இந்த படத்திற்கு இளையராஜா குடும்பத்தினர் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக மிஷ்கின் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.
Mysskin and Vijay Sethupathi joins for a new film