தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் நள்ளிரவு…
டூவிலரில் ஹெல்மெட் போடாமல் சென்ற குற்றத்திற்காக ராஜா மற்றும் உஷா தம்பதியினரை போலீஸ் துரத்தினர்.
அப்போது போலீஸ் அவர்களின் பைக்கை எட்டி உதைக்க, இருவரும் கீழே விழ கர்ப்பிணி பெண் உஷா பலியானார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதே அந்த குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்க போவதாக அறிவித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
அதன்படி இன்று திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு சென்ற கமல், அந்த குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி அளித்தார்.
உஷாவின் கணவருக்கு ரூ. 5 லட்சத்தையும், உஷாவின் தாயாருக்கு ரூ. 5 லட்சத்தையும் கொடுத்து உதவினார்.
MNM President Kamalhassan donated Rs 10lakhs to Late Mrs Usha family