தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.
நேற்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்பு மனு நிறைவடைந்தது.
இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மார்ச் 19ல் வெளியிட்டார்.
தற்போது கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவருக்கு அறுவைச் சிகிட்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டுள்ளது.
இது குறித்து மநீம ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள குறிப்பில்..,
அனைவருக்கும் வணக்கம்.
இன்று காலை கோவை பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவருடன் பேசவும், தற்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர்.
அப்போது யாரோ தவறுதலாக தலைவரின் காலை மிதித்து விட்டனர்.
சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை செய்த காலில் அடிபட்டதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெறப்பட்டது.
காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் சொன்னதற்கிணங்க. கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார்.
இன்றைய பிரச்சார திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். விரைவில் ஊடக நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
உங்கள் அன்பிற்கு நன்றி.
ஊடகப்பிரிவு
மக்கள் நீதி மய்யம்.
MNM leader Kamal Haasan is now taking rest