தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ 280 கோடி முறைகேடு் ஊழல் புகார் எழுந்தது.
எனவே தமிழக அரசு நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
சூரப்பாவின் செயல்பாடுகளை அ.தி.மு.கவுடன் இணைந்து தி.மு.கவும் விமர்சனம் செய்து வருகின்றது.
இந்த நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டார்.
அதில்… ‘எவனோ எழுதிய மொட்டைக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை குழு அமைத்துள்ளனர்.
அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், அண்ணாப் பல்கலைக்கழக வாகனங்களையும் பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?
உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததே விசாரித்துவிட்டீர்களா?
தேர்வு தேர்ச்சி ஆகியவை கல்வியாளர்கள் கடமை. கறைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?
இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், தற்போது மதிப்பெண் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறீர்களா?
சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடுகள் மீது மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
ஆனால், ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசன் நான் சும்மா இருக்க மாட்டேன்.
நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது.
சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?’ என்று கடுமையாக பேசியிருந்தார் கமல்
சூரப்பாவும் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதனால் கமல் மீது அரசியல்வாதிகளின் கண்டனம் எழுந்தது. கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அவர், சங்கி, பா.ஜ.கவின் பிடீமாக செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து தன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார் கமல்.
அதில்… “அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.
ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 7, 2020
MNM leader Kamal Haasan clarifies his political stand over Soorappa issue