திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லையே.; கமல் கேள்வி

திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லையே.; கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை.

இல்லத் தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.

குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது.

தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலைமையில்தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள்.

‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எனும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.

வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குடும்பத் தலைவியின் உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பை விடக் குறைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டது.

‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டன.

தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை.

இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்தச் சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.

கமல்ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM founder Kamal Haasan requests TN Government

கல்லூரிக்கு நிகராக போலீஸ் பயிற்சியிலும் சுவாரஸ்யங்கள்.; ‘டாணாக்காரன்’ குறித்து தமிழ்

கல்லூரிக்கு நிகராக போலீஸ் பயிற்சியிலும் சுவாரஸ்யங்கள்.; ‘டாணாக்காரன்’ குறித்து தமிழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார்.

இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர் ‘நெடுநல்வாடை’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.

இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

‘டாணாக்காரன்’ படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறியதாவது….

“ போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையை சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும்.

எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுப்போக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்” என கூறினார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ள டீசரை பாராட்டி சினிமா துறையினரும், ரசிகர்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: தமிழ்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

இசை: ஜிப்ரான்

பாடல்கள்: சந்துரு

படத்தொகுப்பு: ஃபிலோமின் ராஜ்

கலை: ராகவன்

சண்டைக்காட்சி: சாம்

நடனம்:ஷெரீப்

தயாரிப்பு நிர்வாகம்:ராஜாராம், சசிகுமார்

மக்கள் தொடர்பு:ஜான்சன்

தயாரிப்பு: ‘பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன்

Vikram Prabhu’s Taanaakkaran is ready for release

ஆர்யாவின் ‘அரண்மனை 3’ க்ளைமாக்ஸ் அப்டேட் பார்ய்யா..: 6 மாதம் சிஜி.. 16 நாட்கள் சூட்டிங்.. ரூ 1.5 கோடி.. இன்னும் நிறைய

ஆர்யாவின் ‘அரண்மனை 3’ க்ளைமாக்ஸ் அப்டேட் பார்ய்யா..: 6 மாதம் சிஜி.. 16 நாட்கள் சூட்டிங்.. ரூ 1.5 கோடி.. இன்னும் நிறைய

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான படங்களை தருபவர் சுந்தர் சி.

இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்களில் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது.

அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை 3 படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.

அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது.

இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.

படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது.

முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு

Sundar C in Aranmanai 3 to release in theaters soon.

உங்களுக்கும் இப்டி நடந்திருக்கலாம்..; போலீசிடம் பணத்தை பறிகொடுத்து மீட்க போராடும் இளைஞனின் கதையை சொல்லும் ‘வலியோர் சிலர்’

உங்களுக்கும் இப்டி நடந்திருக்கலாம்..; போலீசிடம் பணத்தை பறிகொடுத்து மீட்க போராடும் இளைஞனின் கதையை சொல்லும் ‘வலியோர் சிலர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி.ஜே.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலியோர் சிலர்’. இப்படத்தை ‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார்.

மேலும் கௌரி அனில்குமார், சுந்தர வடிவேலு, பிரசாத், பிரசாந்த் சீனிவாசன், விஜயலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நடுத்தர இளைஞனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் நவீன்.

போலீசிடம் பணத்தை பறிகொடுத்து, அதை அவர்களிடம் இருந்து மீட்க போராடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் காட்சிகள் நடுத்தர இளைஞர்களின் வாழ்வில் , அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுமை கொண்ட போலீஸ் அதிகாரிகளின் செயல்கள் ஏதாவது ஒன்றை ஞாபகப்படுத்தும் என்கிறார் நவீன்.

இப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை 7 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தொகுப்பு – அஜு வில்பர்
பாடலாசிரியர் – ஃபடின், ஜெனிபர் ராஜசேகர்
பாடகர்கள் – பரத் தனசேகர், நிவேதிதா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன்

Marina Puratchi director Naveen’s next film is titled Valiyor Silar

வனிதா வலையில் விழுந்த பவர் ஸ்டார்.; திருமண கோலத்தில் தம்பதிகள்.!

வனிதா வலையில் விழுந்த பவர் ஸ்டார்.; திருமண கோலத்தில் தம்பதிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை வனிதா… எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பெயர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பிரபலமானவர் வனிதா.

இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இவருடன் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

2020 கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் உதவி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார்.

சில தினங்களிலேயே அவரை நம்பி ஏமாந்துவிட்டேன். அவர் குடிகாரர் என சினிமா பாணியில் அவரையும் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளார் வனிதா.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என பல வகையான கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இது புது படமா? புது புருஷனா?

படத்தின் இயக்குனர் சொல்வாரா வனிதா.? இல்ல நீங்களே சொல்வீங்களா?

Vanitha weds Power Star Srinivasan photo goes viral

அருள்நிதி பிறந்தநாளில் D BLOCK பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாண்டிராஜ்

அருள்நிதி பிறந்தநாளில் D BLOCK பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில், B.சக்திவேலன் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ​​இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.

MNM Films சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கும் இப்படத்தை, பிரபல YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் (எரும சானி புகழ்) இயக்கியுள்ளார்.

Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது…

திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தைத் வெளியிடுவது மிகச் சிறந்த தருணம் ஆகும்.

தமிழ் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது, மேலும் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளிப்யிட்டதில், எங்கள் படக்குழு மிகவும் உற்சாகத்தில் உள்ளது. படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார்.

MNM Films நிறுவனம் சார்பில் அரவிந்த் சிங் கூறியதாவது…

பாண்டிராஜ் போன்ற முன்னணி இயக்குநர் எங்கள் “டி பிளாக்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் அனைத்து பணிகளு,ம் முடிந்த நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.

இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பகிர்ந்து கொண்டதாவது…

இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும், நேர்மறையான அதிர்வுகளைப் பெற்று வருவதால் எங்கள் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம், திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, ​​இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது பெருமையாக இருக்கிறது என்றார்.

இயக்குநர் விஜய்குமார் இப்படத்தில் அருள்நிதியின் நண்பராக நடித்துள்ளது பற்றி அவர் கூறுகையில்..,

“அருள்நிதியுடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது, அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக்கடினமான முயற்சிகளை மேற்கொண்டார்.

இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால், அவர் 7 கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார் என்றார்.

அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில்…
அரவிந்த் சிங் (ஒளிப்பதிவு), Ron Ethan Yohan (இசை), கணேஷ் சிவா (படத்தொகுப்பு), பிரதீப் தினேஷ் (சண்டைப்பயிற்சி), வீரமணி கணேசன் (கலை இயக்கம்), கௌசிக் கிருஷ் (பின்னணி இசை), ஞானகரவேல் (பாடல்), Sync Cinema ( ஒலி வடிவமைப்பு), Oliver Nathanel (ஸ்டைலிஷ்), முத்துவேல் (ஸ்டில்ஸ்), வாசு (ஒப்பனை), முருகன் (உடைகள்), Infinity Media (DI), சண்முக பாண்டியன் M (DI Colorist), G பாரதி(VFX), NXTGEN Studio (விளம்பர வடிவமைப்புகள் ), பவிதார் சிங் -அஸ்வின் சிங் (இணை தயாரிப்பு) பணிகளை செய்துள்ளனர்.

D Block first look released by Pandiraj

More Articles
Follows