தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் இஸ்மாயில் (வயது 63).
இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.
நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் தகவல்கள்…
1989 ஆம் ஆண்டில் முதல் மலையாள படத்தை இயக்கினார். 1984 ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார் இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் மலையாளத்தில் திலீப் & நயன்தாரா நடித்த ‘பாடிகாட்’ என்ற படத்தை இயக்கினார். இதன் பின்னர் இதே படத்தை தமிழில் விஜய்யை வைத்து ‘காவலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அதன் பின்னர் ஹிந்தியில் 2011 ஆண்டில் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த பாடிகாட் என்ற படத்தையும் இயக்கி பாலிவுட்டில் நுழைந்தவர் சித்திக்.
2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் மம்முட்டி நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.
இதே படத்தை தான் தமிழில் அரவிந்தசாமி மற்றும் அமலாபால் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இந்த படம் தமிழில் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.
இவர் மலையாளத்தில் இயக்கிய பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மோகன்லால் வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இறுதியாக இயக்கி இருந்தார்.
malayalam director Siddique Ismail passes away