தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மாஸ்டர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப நன்றி.
மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்துள்ளனர். இது நிறைய பேருக்கு நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.
‘மாஸ்டர்’ என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
“இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்தது.”
இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்..
Makkal Selvan Vijay sethupathi praises Thalapathy Vijay