‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijay sethupathiசெங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மாஸ்டர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப நன்றி.

மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்துள்ளனர். இது நிறைய பேருக்கு நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

‘மாஸ்டர்’ என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்தது.”

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்..

Makkal Selvan Vijay sethupathi praises Thalapathy Vijay

‘புதுப்பேட்டை 2’ கன்பார்ம்.! அதிரடியாக 3 படங்களில் இணையும் தனுஷ் – செல்வராகவன்

‘புதுப்பேட்டை 2’ கன்பார்ம்.! அதிரடியாக 3 படங்களில் இணையும் தனுஷ் – செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pudhupettai 2‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்தனர் செல்வராகவன் – தனுஷ்.

இதன் பின்னர் பல ஆண்டுகளாக இந்த சகோதரர்கள் இணையவில்லை.

தற்போது ‘நானே வருவேன்’ படத்துக்காக இணைந்து பணிபுரிகின்றனர்.

தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்பட அறிவிப்பு வெளியாகும் முன்பே ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணம் இந்தக் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை அறிவித்தது.

ஆனால் 2024ல் ஆண்டில்தான் படம் வெளியாகும் என அறிவித்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் தான் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘புதுப்பேட்டை 2’ படத்தில் செல்வராகவன் – தனுஷ் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

இந்த 2 படங்களை முடித்துவிட்டே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பட பணிகளை தொடங்கவுள்ளார் செல்வராகவன்.

Dhanush and Selvaraghavan joins for new movie again

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New-Project-2020-06-06T165306.986அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் ரஜினிகாந்த் என இந்தியாவே எதிர்பார்த்த நிலையில் தன் உடல்நல குறைவால் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

இதனால் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

“ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார் நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.

சரி இனியாவது தலைவர் ரஜினியை சீண்ட மாட்டார் சீமான் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினியைக் குறித்து சீமான் கூறியுள்ளதாவது :

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவரைத் தற்கொலை முடிவுக்கு தள்ளியிருப்பார்கள்.

4 வருடம் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

NTK leader Seeman controversy speech about Rajinikanth

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sathishஎதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர். லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சதீஷ்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேலம் நட்ராஜன் உடன் வீடியோ காலில் பேசி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர்கள் அடிக்கடி ட்விட்டரில் பேசிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் பிரபல தனியார் கல்லூரி அழகான ஆண்கள் வசிக்கும் பகுதி எது என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் நடிகர் சதீஷ்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… “இந்த கருத்து கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதற்கு பின்னர் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சென்னை முதலிடத்தைப் பெறவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்” என்று பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் சதீஷ்…, “ரசிக, ரசிகைகள் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நண்பரது அட்மின் செய்தது என்றும், இனி இவ்வளவு வெளிப்படையாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம்” இவ்வாறு நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Sivakarthikeyan and Sathish fun on Loyola polls

JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annattheசிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த அவருடைய 168-வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனா்.

ஒளிப்பதிவை வெற்றி் கவனிக்க இசை பணியை இமான் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் 2020 டிசம்பர் 2ஆம் வாரத்தில் சூட்டிங் தொடங்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள நடிகா் ரஜினிகாந்த், தனி விமான மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் ஹைதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

2021 ஜனவரி மாதத்துக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அண்ணாத்த சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா என உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினியும் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

எனவே ‘அண்ணாத்த’ படம் டிராப் என வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து ட்வீட் போட்டுள்ளனர்.

அதில் 2021 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் ரிலீஸ் (வியாழன்) என அறிவித்துள்ளனர்.

Annaatthe release date announced

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanமதுரை ஒத்தக்கடை பகுதியில் தன் கட்சி சார்பான தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் சீமான்.

அப்போது அவர் பேசியதாவது…

நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி.

உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும். நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும்.

நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது.

வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன்” எனப் பேசினார் சீமான்.

சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் கிரீஸ் டப்பாவை கவுண்டமணி மீது எட்டி உதைப்பார் செந்தில் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சீமானின் இந்த காமெடியைப் மையப்படுத்தி நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது.

Netizen criticise seemans today speech

More Articles
Follows