தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தனுஷ் தங்களது மகன் என்றனர்.
மேலும் அவர் மாதந்தோறும் தங்கள் வாழ்வாதரத்துக்கான செலவை தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் போலியானவை என்று கதிரேசன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் கதிரேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தங்களுடைய இறுதி காலத்தில் தனுஷ் அருகில் இருக்க, அவரை மீட்டு தர வேண்டும் என அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Madurai couple petition to Collector in Dhanush issue