JUST IN சாமானியர்களுக்கு ஒரு சட்டம் தனுஷுக்கு ஒரு சட்டமா?..; வரி விலக்கு கேட்ட தனுஷுக்கு நீதிபதி கண்டனம்

JUST IN சாமானியர்களுக்கு ஒரு சட்டம் தனுஷுக்கு ஒரு சட்டமா?..; வரி விலக்கு கேட்ட தனுஷுக்கு நீதிபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இன்றைய விசாரணையில்…

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷ்க்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதி கேட்டுள்ளார்.

என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்?

சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமான்ய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?

இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு” என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதை ஏற்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு.

Madras High Court ordered Dhanush to pay the entry tax in luxury car case.

கண்ணா இன்னும் ஒரே வாரம் தான்… பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..; ‘அண்ணாத்த’ கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்

கண்ணா இன்னும் ஒரே வாரம் தான்… பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..; ‘அண்ணாத்த’ கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா லக்னோவில் நடக்க உள்ளதாம்.

அங்கு சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் படமாக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவேதான் அதற்குள் டப்பிங் பணிகளை படக்குழு செய்து வருகிறதாம்.

இதனிடையில் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் விரைவில் என படக்குழு அறிவித்தனர்.

எனவே அண்ணாத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர். மேலும் இது தொடர்பாக டிரெண்டும் செய்தனர்.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் ரஜினியின் 46 வருட திரையுலக வாழ்வை முன்னிட்டும் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளதாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவையில்லாமல் ஆகஸ்ட்12-ந் தேதி டைரக்டர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அதனையும் படக்குழு குறிப்பிட்டு வெளியிட உள்ளதாம்.

அண்ணாத்த தீபாவளி விருந்தாக 07-11-2021 அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Annatthe first look release count down starts

D44 TITLE TREAT TOMORROW : தனுஷுடன் இணையும் 3 ரோஜாக்கள் 2 ராஜாக்கள்

D44 TITLE TREAT TOMORROW : தனுஷுடன் இணையும் 3 ரோஜாக்கள் 2 ராஜாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவர்தான் தனுஷின் D44 படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். தங்கமகன் படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் அனிருத் இணையும் படமிது.

தனுஷின் இந்த புதிய படத்தில் நித்யா மேனன் & ராஷி கண்ணா & பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

மேலும் தனுஷுடன் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்பட டைட்டில் லுக் நாளை வெளியாக உள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இவர்கள் இயக்குனர் யார் என்பதை அதில் குறிப்பிடவில்லை.

Dhanush D44 movie Title look tomorrow

ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’.

இந்தப் படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘பிக்பாஸ்’ பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

The first look poster of Prabhu Deva’s next film is out now

சோடா கம்பெனிக்கு முதலாளியானார் ‘கமலி’ ஆனந்தி

சோடா கம்பெனிக்கு முதலாளியானார் ‘கமலி’ ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ‘கயல்’ ஆனந்தி.

விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, கமலி FROM நடுக்காவேரி ஆகிய படங்கள் இவரது பெயர் சொல்லும்.

இந்த நிலையில் தெலுங்கில் ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்ற படத்தில் சூரி பாபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஆனந்தி. இதில் சோடா கம்பெனி முதலாளியாக நடித்துள்ளார்.

சுதீர் பாபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் வாய்ப்புகள் இருக்காது என சிலர் எதிர்பார்த்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது ஆனந்தி கைவசம் ‘ஏஞ்சல்’, டைட்டானிக், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்கள் உள்ளன.

Kamali Anandhi’s new film is titled Sridevi Soda center

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

இதனை PS 1 என்றும் அழைக்கின்றனர். இதனை தமிழ் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்கின்றனர படக்குழுவினர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி…

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர்.

சேந்தனாக அமுதன் – அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிப்பதாக வெளியானது.

இந்த பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Ponniyin Selvan Character introduction out

More Articles
Follows