தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவை கலக்கிய பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மடோனா செபாஸ்டின்.
தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண், ஜுங்கா படங்களில் நடித்தார்.
தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘‘சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என பதிவிட்டுள்ளார்.
எனவே அந்த நபர் அவரின் காதலான இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மடோனா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.