தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடலாசிரியரும் கவிஞருமான பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பா.விஜய் பேசியதாவது…
“இன்றைய சூழலில் படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் மிகவும் சவாலானது. அந்த சவாலை ஏற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களால் இன்று இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்களின் பிஆர்ஓ.க்களை அனுப்பி வைத்துள்ளனர்.
ஹாசினி வழக்கு முதல் ஆசிபா வழக்கு வரை நாட்டில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.
நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை அப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டேன்.
குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு.
இந்தியாவிற்கு வரவே வெளிநாட்டினர் பயப்படுகிறார்கள். அந்தளவு சிறுமிகள் இங்கே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனைப் பார்த்தபடியே இருக்கிறார்கள்.
தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கு எல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆருத்ரா படத்தை சொல்லியுள்ளேன்.” என பேசினார்.
Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launch